லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்! திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார். இம்மசோதா நிறைவேறினால் இலவச மின்சாரம் பெறும் பல லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.
Recommended Video
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா என்பது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு அதிக அதிகாரம், அதிகபட்ச மின் கட்டணம் நிர்ணயம் என பல அம்சங்களைக் கொண்டது. இந்த மசோதாவின் மிக முக்கிய அம்சமாக, மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளது.

தமிழகம் எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வந்தன. இது தொடர்பாக ஏற்கனவே பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், இச்சட்ட திருத்தத்தால் மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்கள் பாதிக்கப்படும். இந்த சட்டத் திருத்த மசோதாவானது, மின் விநியோக பிரிவின் உரிமங்களை ரத்து செய்ய வழிவகை செய்வதாக தெரிகிறது.இந்த மசோதா மூலம் வர்த்தக பகுதிகளில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை, புதிய தனியார் நிறுவனங்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் நிலையும் ஏற்படும். இதனால், சமூக சிந்தனையின்றி லாபநோக்கத்தையே குறிக்கோளாக கொண்டு அதற்கேற்ப முறைகளை வகுக்கும் உரிமையை தனியார் நிறுவனங்கள் பெறும். மேலும், மாநிலத்தின் பொதுத்துறை மின்சாரத்தை பெறும் நுகர்வோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே மானியம் பெறும் நிலை ஏற்படும்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மின்சார திருத்தச்சட்டத்தின் 26, 28, 32 ஆகியபிரிவுகளை திருத்துவதன் மூலம், பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே வழங்கப்படுகிறது. இது, மாநில மின் தொடரமைப்புக் கழகத்தின் எஸ்எல்டிசி மையம், மின் விநியோக நிறுவனங்கள் அல்லது மாநில அரசின் மின்சாரம்தொடர்பான செயல்பாடுகளை மறைமுகமாக கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும். எனவே, மக்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை மாநில அரசுக்குச்சொந்தமான விநியோகஸ்தர்களை கொண்டு வழங்கும் நிலை தொடர அனுமதிக்கும் வகையில், இந்த விவகாரத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதேபோல மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், பிரதமர் மோடிக்கு இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார்.

லோக்சபாவில் தாக்கல்
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இன்று லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். இம்மசோதாவை அறிமுக நிலையிலேயே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
அப்போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, இம்மசோதா நிறைவேறினால் தமிழகத்தில் இலவச மின்சாரத்தை நம்பி இருக்கும் பல லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றார். இம்மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது என்றது காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தியும் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதன் பின்னர் இம்மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications