மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசு
டெல்லி: மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி வீணாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
மத்திய அரசின் கொரோனா தொடர்பான மறுசீரமைக்கப்பட்ட கொள்கை முடிவுகளை பிரதமர் மோடி திங்கள்கிழமை வெளியிட்டார். இதனடிப்படையில் ஜூன் 21-ந் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
மத்திய அரசு இதுவரை 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இதுவரை வழங்கி வந்தது. இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75%-த்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்கும்.

புதிய விநியோக முறை
தடுப்பூசி விநியோகங்களில் குழப்பம் ஏற்படாமல் இருக்க மாநிலங்களின் மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசிகள் வீணாகுதல் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 33% பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கை குறைவு
45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 41.7% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோரில் 25.3% பேருக்குதான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

1.19 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு
தற்போதைய நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.19 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின் படி, சுகாதார பணியாளர்கள், முன்கள பாணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.

மாநிலங்களில் முன்னுரிமை
அதேபோல் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மாநிலங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்; கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்ட விவரங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications