பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி.. 7 மாணவர்களுக்கும் தொடர்புள்ளது.. தந்தை பேட்டி
டெல்லி: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பெண்ணின் தந்தை சந்தித்து பேசினார். மேலும் பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களுக்கும் தொடர்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் முக்கிய ஆதாரமாக இருப்பது அவர் செல்போனில் பதிவு செய்யயப்பட்டிருந்த தற்கொலை கடிதம் மட்டுமே.

அந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்வதற்காக சென்னையிலுள்ள தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். பாத்திமாவின் செல்போனில் இருந்த ஆதாரம் மர்மத்தை கிளப்பியது. அதில் மூன்று பேராசிரியர்கள் மீதுதான் பாத்திமா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்திப் அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியையும் அப்துல் லத்திப் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது பாத்திமா வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை அப்துல் சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில் பாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கு தொடர்பு உள்ளது. மகளின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரிக்கை வைத்தேன். மகள் தொடர்பான ஆதாரங்களை கோட்டூர்புரம் போலீஸ் அழித்துவிட்டது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். அது போல்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட்டேன் என தெரிவித்தார்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications