ராஜஸ்தானில் சத்தீஸ்கர் பார்முலா? சச்சின் பைலட் மீண்டும் துணை முதல்வர் அல்லது மாநில காங்கிரஸ் தலைவர்?
டெல்லி: சத்தீஸ்கரில் கலகக் குரல் எழுப்பி வந்த டிஎஸ் தியோ சிங், துணை முதல்வராக நியமித்து உட்கட்சி மோதலுக்கு முடிவு கட்டியிருக்கிறது காங்கிரஸ். இதே பார்முலாவை ராஜஸ்தானில் செயல்படுத்தி சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி அல்லது மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி தரக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இரண்டரை ஆண்டுகள்தான் முதல்வர் பதவி வழங்குவது என கட்சி மேலிடம் முடிவு செய்தது; எஞ்சிய இரண்டரை ஆண்டுகள் எனக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என மூத்த தலைவர் சிங் தியோ கலகக் குரல் எழுப்பி வந்தார். இதனால் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸில் குழப்பம் நிலவி வந்தது. இதனாலேயே தமது வசம் இருந்த பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இலாகாவை ராஜினாமா செய்தார் தியோ சிங். ஆனால் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், மருத்துவக் கல்வி, 20 அம்ச திட்ட அமலாக்கம் மற்றும் வணிக வரித் துறை இலாகாவை அவர் ராஜினாமா செய்யாமல் இருந்தார். அத்துடன் முதல்வர் பூபேஷ் பாகலை கடுமையாக விமர்சித்து கடிதமும் அனுப்பி இருந்தார் தியோ சிங். இதனால் டெல்லி மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது.
இதனிடையே கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருந்த டிகே சிவகுமார்- சித்தராமையாவை ஒருங்கிணைத்து தேர்தலில் அமோக வெற்றியை அறுவடை செய்தது காங்கிரஸ். இதே பார்முலாவை அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் அமல்படுத்தி உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது காங்கிரஸின் திட்டம்.
இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிரடியாக தியோ சிங்கை துணை முதல்வராக்கி அவரது அதிருப்தி குரலை கட்டுப்படுத்தி இருக்கிறது காங்கிரஸ். இதே பார்முலாவையே ராஜஸ்தானிலும் செயல்படுத்த போகிறதாம் காங்கிரஸ். ராஜஸ்தான் மாநிலமும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் சச்சின் பைலட்டுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்குவது அல்லது மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி கொடுப்பது என்பது காங்கிரஸ் மேலிடத்தின் திட்டமாம். இதனை முதல்வர் கெலாட் எதிர்த்தால் அவரை சமாதானப்படுத்துவது என முடிவு செய்திருக்கிறதாம் காங்கிரஸ் மேலிடம்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications