ராஜஸ்தானில் சத்தீஸ்கர் பார்முலா? சச்சின் பைலட் மீண்டும் துணை முதல்வர் அல்லது மாநில காங்கிரஸ் தலைவர்?
டெல்லி: சத்தீஸ்கரில் கலகக் குரல் எழுப்பி வந்த டிஎஸ் தியோ சிங், துணை முதல்வராக நியமித்து உட்கட்சி மோதலுக்கு முடிவு கட்டியிருக்கிறது காங்கிரஸ். இதே பார்முலாவை ராஜஸ்தானில் செயல்படுத்தி சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி அல்லது மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி தரக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இரண்டரை ஆண்டுகள்தான் முதல்வர் பதவி வழங்குவது என கட்சி மேலிடம் முடிவு செய்தது; எஞ்சிய இரண்டரை ஆண்டுகள் எனக்குதான் முதல்வர் பதவி தர வேண்டும் என மூத்த தலைவர் சிங் தியோ கலகக் குரல் எழுப்பி வந்தார். இதனால் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸில் குழப்பம் நிலவி வந்தது. இதனாலேயே தமது வசம் இருந்த பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இலாகாவை ராஜினாமா செய்தார் தியோ சிங். ஆனால் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், மருத்துவக் கல்வி, 20 அம்ச திட்ட அமலாக்கம் மற்றும் வணிக வரித் துறை இலாகாவை அவர் ராஜினாமா செய்யாமல் இருந்தார். அத்துடன் முதல்வர் பூபேஷ் பாகலை கடுமையாக விமர்சித்து கடிதமும் அனுப்பி இருந்தார் தியோ சிங். இதனால் டெல்லி மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது.
இதனிடையே கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருந்த டிகே சிவகுமார்- சித்தராமையாவை ஒருங்கிணைத்து தேர்தலில் அமோக வெற்றியை அறுவடை செய்தது காங்கிரஸ். இதே பார்முலாவை அடுத்த சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் அமல்படுத்தி உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது காங்கிரஸின் திட்டம்.
இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிரடியாக தியோ சிங்கை துணை முதல்வராக்கி அவரது அதிருப்தி குரலை கட்டுப்படுத்தி இருக்கிறது காங்கிரஸ். இதே பார்முலாவையே ராஜஸ்தானிலும் செயல்படுத்த போகிறதாம் காங்கிரஸ். ராஜஸ்தான் மாநிலமும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் சச்சின் பைலட்டுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்குவது அல்லது மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி கொடுப்பது என்பது காங்கிரஸ் மேலிடத்தின் திட்டமாம். இதனை முதல்வர் கெலாட் எதிர்த்தால் அவரை சமாதானப்படுத்துவது என முடிவு செய்திருக்கிறதாம் காங்கிரஸ் மேலிடம்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications