ஒரே நாடு ஒரே தேர்தல் வழியே அதிபர் ஆட்சி? கர்நாடகா, கேரளா முதல்வர்கள் சித்தராமையா, பினராயி எதிர்ப்பு!
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பாஜக திட்டமிடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தியது. ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு- ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைன் இந்த ஒப்புதலுக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பது தேவையற்றது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையிலும் சாத்தியமற்றது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. பணவீக்க விகிதம் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் திசை திருப்புவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனில் அரசியல் சாசனத்தில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஐந்து அத்தியாயங்களை முழுமையாக மாற்ற வேண்டும். தற்போதைய நிலையில் அரசியல் சாசன திருத்தம் என்பது சாத்தியம் இல்லாதது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடியதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அனைத்து மாநில அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் மத்திய அரசிடம் குவிக்க வகை செய்யும் இந்த திட்டம். லோக்சபா தேர்தல் தோல்விகளில் இருந்து பாஜக இன்னமும் பாடம் கற்கவில்லைதான். ஜனநாயக இந்தியாவை அதிபர் ஆட்சியை முறையை நோக்கி சங் பரிவாரங்கள் நகர்த்திக் கொண்டு இருக்கின்றன என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications