22 ஆண்டுகளுக்குப் பின் வாக்கெடுப்பு- காங். தலைவர் தேர்தல்-நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவராக சோனியா காந்தி, 1998-ல் பொறுப்பேற்றார். மத்தியில் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி ஆட்சியும் நடைபெற்றது. 2000-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சோனியா காந்தியும் ஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். அத்தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இதன்பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 2017-ல் ராகுல் காந்தி தலைவராக நியமிக்கப்பட்டார்.

கலகக் குரல்
ஆனால் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் பதவியேற்றார். கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவியை நேரு குடும்பம் அல்லாத ஒருவர் ஏற்க வேண்டும் என்ற குரலும் வலுத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். கபில் சிபல், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலரும் காங்கிரஸை விட்டு வெளியேறினர்.

ராகுல் காந்திக்காக தீர்மானங்கள்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ராகுல் காந்தியே தலைவராக வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஆனால் ராகுல் காந்தி இதனை திட்டவட்டமாக நிராகரித்தார். அதேநேரத்தில் நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கமிட்டிகள், ராகுல் காந்தியே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் அறிவிக்கை வெளியீடு
இதனிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசிதரூர் எம்பி. ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இத்தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 30.

அக்.17-ல் தேர்தல்
இத்தேர்தலில் போட்டியிட அதாவது வேட்புமனுத் தாக்கல் செய்ய 10 மாநில காங்கிரஸ் ஆதரவுகள் இருந்தால் போதும். அக்டோபர் 17-ந் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும். சுமார் 9,000 பேர் இத்தேர்தலில் வாக்களிப்பர். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அக்டோபர் 19-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications