லோக்சபா தேர்தல்:பாஜக வென்ற 79 தொகுதிகளில் வாக்கு பதிவு விகிதத்தில் பெரும் குளறுபடி- காங்கிரஸ் 'ஷாக்'
டெல்லி: லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக வென்ற 79 தொகுதிகளில் வாக்குப் பதிவு வித்தியாசத்தில் பெரும் குளறுபடி அம்பலமாகி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. லோக்சபா தேர்தலில் 79 தொகுதிகளில் வாக்குப் பதிவில் குளறுபடி செய்தே பாஜக வெற்ரி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சந்தீப் தீக்ஷித் குற்றம் சாட்டி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில்தான் வென்றது. 2019 லோக்சபா தேர்தலில் 303 இடங்களை கைப்பற்ற பாஜகவால் பெரும்பான்மைக்கான 272 இடங்களைக் கூட பெற முடியாமல் போனது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

வாக்குப் பதிவு குழப்பம்: லோக்சபா தேர்தலின் போதே வாக்குப் பதிவு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது வோட்ஃபார் டெமாக்கரசி Vote for Democracy (VFD) என்ற அமைப்பின் ஆய்வு அறிக்கையை முன்வைத்து காங்கிரஸ் இந்த பிரச்சனையை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சந்தீப் தீக்ஷித் இது தொடர்பாக கூறியதாவது: லோக்சபா தேர்தலில் இறுதி வாக்குப் பதிவு எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதை வோட்ஃபார் டெமாக்கரசி அமைப்பின் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. அதாவது இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு சதவீதம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகளில் உள்ள முரண்பாடுகளை அந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஒடிஷா, ஆந்திரா: தேர்தல் ஆணையத்தின் முதல் அறிவிப்புக்கும் இறுதி அறிவிப்புக்கும் இடையேயான வேறுபாடு 4.7%. மொத்தம் 5 கோடி வாக்குகள் வித்தியாசத்தை அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒடிஷா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் வாக்குப் பதிவு வித்தியாசம் 12.5% ஆக இருக்கிறது. ஆந்திராவில் தேர்தல் ஆணைய வாக்குப் பதிவு அறிக்கைகளில் 12.48% அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது.
இவ்வளவு வித்தியாசமா?: வோட்ஃபார் டெமாக்கரசி அமைப்பானது பாஜக வென்ற 79 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு வித்தியாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவின் இறுதி விவரத்தை வெளியிட 11 நாட்களை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்டது. இதேபோல ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவவவின் இறுதி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தாமதமாகவே வெளியிட்டது. இதனால்தான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.
79 தொகுதிகள் விவரம்: லோக்சபா தேர்தலில் 79 தொகுதிகளில் பாஜக, வாக்குப் பதிவில் குளறுபடி செய்தே வெற்றி பெற்றிருக்கிறது. ஒடிஷா 18, மகாராஷ்டி 11, மேற்கு வங்கம்10, ஆந்திரா 7, கர்நாடகா 6, சத்தீஸ்கர் 5, ராஜஸ்தான் 5, பீகார் 3, ஹரியானா 3, மத்திய பிரதேசம் 3 , தெலுங்கானா 3, அஸ்ஸாம் 2, அருணாச்சல பிரதேசம் 1, குஜராத் 1, கேரளா 1 என பாஜக வென்ற 79 தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு வித்தியாசம் இருக்கிறது.
இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.
-
நிதிஷ்குமார் முதல்வர் பதவி காலி.. ஆரம்பித்த பாஜக! அதிமுகவுக்கு அச்சம்.. எடப்பாடிக்கும் இதே கதி தானா! -
ஆர்எஸ்எஸ் டவுசர் அணியமாட்டார் முருகன்! மதுக்கூர் ராமலிங்கத்தின் பேச்சால் ஆடிப்போன பாஜக.. இது எப்போ? -
நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக -
பரபர சூழலில் இன்று அதிமுக மா.செக்கள் கூட்டம்.. ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு!












Click it and Unblock the Notifications