Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிசோரமில் தொங்கு சட்டசபை.. சத்தீஷ்கரில் ஆட்சியை தக்க வைக்குமா காங்? ABP C voter- கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் எனவும், மிசோரம் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. குறிப்பாக சத்தீஷ்கரை பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

 Congress BJP contest: Who will take power in Mizoram, Chhattisgarh, ABP C voter- Poll

பாஜக 15 இடங்களில் மட்டுமே வென்றது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இந்த நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. சில மாநிலங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரைகளும் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு: சத்தீஷ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக சத்தீஷ்கரில் 7-ம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

சத்தீஷ்கர்: இது தொடர்பாக ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 45 முதல் 51 இடங்களும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 39 முதல் 45 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தெரிவித்துள்ளது.

சத்தீஷ்கர் கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:

காங்கிரஸ்: 45-51
பாஜக: 39 -45
பிற கட்சிகள்: 0-02.

மிசோரம்: இதேபோல் மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெருபான்மைக்கு 21 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். இந்த நிலையில், அங்கு வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை எனவும் தொங்கு சட்ட சபை அமையலாம் என்றும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மிசோரம் கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:

எம்.என்.எப்: 13 -17
காங்கிரஸ்: 10 -14
ZPM : 9 -13
பிற கட்சிகள்; 01 -03.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+