‛தப்பிய காங்கிரஸ்’.. முடக்கப்பட்ட எல்லா வங்கி கணக்குகளையும் மீண்டும் பயன்படுத்த அனுமதி - தீர்ப்பாயம்
டெல்லி: காங்கிரஸ் ரூ.210 கோடியை வரியாக செலுத்த வேண்டும் எனக்கூறி அதன் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை பயன்படுத்த வருமான வரி மேல்முறையீட்டு வரி தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொருளாளரான அஜன் மக்கான் டெல்லியில் இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் உள்நோக்கத்தால் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஜனநாயகம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அஜய் மக்கான் கூறியதாவது: நாங்கள் வழங்கும் காசோலைகளை வங்கிகள் ஏற்பது இல்லை என்ற தகவல் நேற்று கிடைத்தது. இதுபற்றி விசாரித்தோம். அப்போது தான் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரசுக்கான வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் நன்கொடைக்காக திறக்கப்பட்ட வங்கி கணக்குகளும் அடங்கும்.
அதோடு ரூ. ரூ.210 கோடிக்கு வருமான வரி கட்டும்படி தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிளின் வங்கி கணக்கு முடக்கப்படுவது என்பத ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்'' என குற்றம்சாட்டி இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் அதில் இருக்கும் நிதியை பயன்படுத்த முடியாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. இத்தகயை சூழலில் தான் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இந்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் வங்கி கணக்கு முடக்கத்துக்கு தற்காலிகமாக விலக்கு வழங்கி உத்தரவிட்டது.
இதன்மூலம் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications