மோடிக்கு டிரம்ப் அனுப்பும்‘பரிசு’களால் இந்தியர்களுக்கு வேதனை.. காங்கிரஸ் காட்டம்!
டெல்லி: "பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அனுப்பும் பரிசுகளால் இந்திய மக்கள் வேதனையடைந்துள்ளனர்" என்று ஹெச்1பி விசா கட்டண உயர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு வழங்குகிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. அதன்படி ஒராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த விசாவை பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டிக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளில் ஹெச்1பி விசாவை பெற்றவர்களில் சுமார் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். தற்போது ஹெச்1பி விசாவின் கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில் இந்த கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். புதிய கட்டண நடைமுறை செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி எச்1பி விசாவுக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். புதிய நடைமுறையால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியர்கள் கடுமையாக பாதிப்புகளைச் சந்தித்து வருவது பற்றி எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு, "மீண்டும் சொல்கிறேன். இந்தியா வலிமையற்ற பிரதமரை கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு, பெறப்படும் பரிசுகளால் (ரிட்டர்ன் கிஃப்ட்) இந்தியர்கள் பெரும்பாலும் வேதனையடைந்துள்ளனர். உங்கள் 'ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்' அரசிடம் இருந்து வரும் பிறந்தநாள் பரிசுகள் இதுதான்... எச்1பி விசாக்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை மிகவும் பாதிக்கக் கூடியது. ஏனெனில் எச்1பி விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள்.
ஏற்கெனவே அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 50% வரியால், 10 துறைகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அவுட்சோர்சிங்கை பாதிக்கும் 'ஹையர்' சட்டம், சபாஹர் துறைமுக விலக்கு நீக்கப்பட்டது ஆகியவை பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும், இந்தியப் பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், மீண்டும் சமீபத்தில் தனது தலையீடு மூலமாகவே இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுகிறார்.
இந்திய தேசிய நலன்கள் மிகவும் உயர்ந்தவை. அரவணைப்புகள், வெற்று முழக்கங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மக்களை 'மோடி, மோடி' என்று கோஷமிட வைப்பது வெளியுறவுக் கொள்கை அல்ல. வெளியுறவுக் கொள்கை என்பது நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பது, இந்தியாவை முதன்மையாக வைத்திருப்பது மற்றும் அறிவு, சமநிலையுடன் நட்பை வழிநடத்துவது ஆகும். மேலோட்டமான துணிச்சலுக்கு அப்பால் இந்தியாவின் தேசிய நலனை முதன்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, "அமெரிக்கா திட்டமிட்டு இந்தியாவை தாக்கி வருகிறது. இது இந்தியா - அமெரிக்க உறவுகளுக்கு நல்லதல்ல" என்று கூறியுள்ளார். மற்றொரு காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவரான பவன் கேரா, "இது ஒரு புதிய நிகழ்வு அல்ல. ஜூலை 5, 2017 அன்று, ராகுல் காந்தி ட்வீட் செய்து, இது போன்று ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. ஏதாவது செய்யுங்கள் என பிரதமர் மோடியை எச்சரித்தார். ஆனால், அவர் அன்றும் இன்றும் பலவீனமான பிரதமராகவே இருக்கிறார். இந்த நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்கள் இழப்பைச் சந்திக்கப் போகிறார்கள். ட்ரம்ப் ஒவ்வொரு நாளும் நம்மை அவமதித்து வருகிறார். ஆனால். பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications