மோடி பற்றி அவதூறு..ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து.. இனி லோக்சபா செல்லலாம்
டெல்லி: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் லோக்சபாவின் காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீதான நடவடிக்கை என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள லோக்சபாவில் காங்கிரஸ் குழு தலைவராக இருப்பவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடி குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அதாவது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை பேச வைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது கடைசி நாளான ஆகஸ்ட் 10ம் தேதி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.

அப்போது அவர் பிரதமர் மோடியை திருதிராஷ்டிரனுடன் ஒப்பிட்டுப் பேசி விவாதத்தை கிளப்பினார். இதுதொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‛‛மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதேபோல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார்'' எனக்கூறியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குரல் வாக்கெடுப்பின் மூலம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி லோக்சபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் சபாநாயகர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடியின் பதிலுரையில் பங்கேற்க முடியாமல் போனது. இதற்கிடையே தான் ஆதிர் ரஞ்சனின் பேச்சு குறித்து அவர் நாடாளுமன்ற குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி இன்று அவர் நாடாளுமன்ற குழுவில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என்றார்.
இதையடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம் -
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹசீனா சையத் விலகல்! கார்கே, செல்வப்பெருந்தகை மீது ஊழல் குற்றச்சாட்டு -
தூக்கியடிக்கப்படும் செல்வப்பெருந்தகை.. ராகுல் காந்தி பெரிய முடிவு? கையில் லிஸ்ட்? அடுத்த தலை யார்? -
'சைலண்ட்' வாக்குகள்! இனி மாநாடுகள் போட்டு பயனில்லை.. கேரளாவின் தலையெழுத்தை தீர்மானிக்க போவதே இதுதான் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா!












Click it and Unblock the Notifications