Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது நாட்டுக்கு பேரழிவை கொடுக்கும்.. ரொம்ப தப்புங்க! நீடா அம்பானிக்கு கார்த்திக் சிதம்பரம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி; இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என நீடா அம்பானி கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் இது நாட்டுக்கு பேரழிவை கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், திமுக கூட்டணி ஆட்சி குறித்த சொன்ன கருத்துக்கு, அவரின் சொந்தக் கட்சியின் சீனியர் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அந்த சர்ச்சையே ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் விவகார்த்தில் நீடா அம்பானி கூறிய கருத்துக்கு கார்த்திக் பதிலடி கொடுத்து பரபரப்பைப் பற்ற வைத்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக்ஸ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

Nita Ambani Karti Chidambaram

இதன் தொடக்க நிகழ்வில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, சர்வதேச ஒலிம்பிக்ஸ் குழு தலைவரும், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவருமான நீடா அம்பானி கலந்து கொண்டனர். அப்போது நீடா அம்பானி, "ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனைகளை நிகழ்த்துவார்கள். ஒலிம்பிக்ஸில் இந்தியா சாதிக்க வேண்டும் என்றும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பது 140 கோடி மக்களின் ஆசை. ஒலிம்பிக்கை இந்தியா நடத்தப் போகும் நாள் தொலைவில் இல்லை. அதற்கான பாதையை இந்த ஒலிம்பிக் இல்லம் அமைத்துள்ளது." என்று கூறியிருந்தார்.

இதற்கு தன் எக்ஸ் பக்கத்தில் பதலளித்துள்ள கார்த்திக் சிதம்பரம், "இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். அரிதாகப் பயன்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். நாடு கடுமையான நிதிச்சுமைக்கும், கடனுக்கும் தள்ளப்படும். முதலில் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்களுக்கு தேவையான பயிற்சி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களால் உலகளவில் போட்டி போட முடியும். இந்தியாவில் இருந்து சாம்பியன்களை உருவாக்குவதில் தொடங்குவோம்." என்று கூறியுள்ளார்.

மேலும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திய நாடுகள் அதன் பிறகு கடுமையான பொருளதார நெருக்கடியில் சிக்கியது குறித்த செய்திக்கான இணைப்பையும் கார்த்திக் பகிர்ந்துள்ளார். முன்னதாக கடந்த 2023 அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி, "2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் போட்டி நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விளையாட்டு மூலம் பதக்கங்களை மட்டுமல்லாமல் இதயங்களை வென்று,அமைதியையும் பரப்ப முடியும். எனவே 140 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உதவியுடன் அந்த கனவை நிறைவேற்ற விரும்புகிறோம்." என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+