"எமர்ஜென்சி காலம்! பிரதமர் மோடி சொல்வது சரிதான், ஆனால்.." கடைசியில் பெரிய ட்விஸ்ட் வைத்த ப.சிதம்பரம்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், அப்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சியான காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக எமர்ஜென்சி காலத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இதற்கிடையே பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் சமீபத்தில் தான் நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. இந்தக் கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.

இந்த முறை லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப அவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி: ஆனால், மறுபுறம் பிரதமர் மோடி முதல் நாளான நேற்று காலை அவை கூடுவதற்கு முன்பே காங்கிரஸ் மீதான விமர்சனத்தைத் தொடங்கிவிட்டார். எமர்ஜென்சி காலம் நாட்டின் இருண்ட காலம் என்றும் அவர் விமர்சித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்திய ஜனநாயகத்தின் மீது கரும்புள்ளி விழுந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்பு எப்படி அகற்றப்பட்டது, நமது நாடு ஒரே இரவில் எப்படி சிறைச்சாலையாக மாறியது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். மீண்டும் ஒரு முறை இதுபோல நடக்கக் கூடாது என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அதாவது ஜூன் 25ஆம் தேதி தான் நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது அவசர நிலையை அறிவித்தார். சுமார் 21 மாதங்கள் நமது நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்தது. இதைக் குறிப்பிட்டே பிரதமர் மோடி காங்கிரஸைச் சாடியிருந்தார்.
காங்கிரஸ் பதிலடி: பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் தரப்பில் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாகவும் பிரதமர் மோடி நடப்பு கூட்டத்தொடரிலாவது அது குறித்துப் பேசுவார் என நம்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி கொடுத்து இருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் இந்த விவகாரத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
ப சிதம்பரம்: இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எமர்ஜென்சி காலம் தான் நமக்கு நினைவூட்டுகிறது என்று பிரதமர் கூறினார். அவரது இந்த கருத்து உண்மை தான்.
ஆனால், அத்துடன் வேறு சில விஷயங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.. இந்த அரசியலமைப்பு தான் மற்றொரு எமர்ஜென்சியை தடுக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டியது.. மேலும் அவர்கள் பாஜகவின் திட்டங்கள் நிறைவேறாமல் இருக்க வாக்களித்தனர்.
மாற்றவே முடியாது: அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை எந்த மனிதனும் அல்லது தெய்வீக ஆட்சியாளர் கூட மாற்ற முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் 18வது மக்களவை தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். இந்தியா தாராளவாத, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மாநிலங்களின் ஒன்றியமாகத் தொடர்ந்து இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications