காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, தேர்தல் அறிக்கை குழு தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.
அதில் அதிரடி திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரங்களை பாருங்கள்:
Apr 02, 2019, 2:07 pm IST
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தகவல்
Apr 02, 2019, 1:15 pm IST
அரசு வேலை வாய்ப்பில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
விவசாயம், கல்வி, சுகாதாரத்திற்கு தனிக் குழு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்புகள்
Apr 02, 2019, 1:14 pm IST
ஆட்சிக்கு வந்த முதல் நாளே ரபேல் விமான ஊழல் பற்றிதான் விசாரணை- ராகுல் காந்தி
Apr 02, 2019, 1:07 pm IST
தென் இந்தியா மக்களுடன் நாங்கள் உள்ளோம் என காண்பிக்கவே வயநாட்டில் போட்டி- ராகுல் காந்தி
Apr 02, 2019, 1:04 pm IST
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும் - ராகுல் காந்தி
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
தமிழகத்திலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - ராகுல்
Apr 02, 2019, 12:49 pm IST
'நியாய்' திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்
Apr 02, 2019, 12:44 pm IST
ஓராண்டாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது - ராகுல் காந்தி
மக்களின் கருத்தை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க கூறியிருந்தேன்
ஒரு பொய் கூட தேர்தல் அறிக்கையில் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினேன்
தினமும் பிரதமர் பல பொய்களை பேசி வருகிறார், நாங்களும் பொய் சொல்ல விரும்பவில்லை
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு