22 ஆண்டுக்கு பின்.. நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. டெல்லி செல்ல மறுத்த ராகுல்.. ஓட்டளிப்பது எப்படி?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யவதற்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெற உள்ள நிலையில் ஓட்டளிக்க டெல்லி செல்ல ராகுல் காந்தி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் ராகுல் காந்தி டெல்லி செல்ல மறுத்ததன் பின்னணியில் உள்ள காரணம் வெளியாகி உள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயப்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மேற்குவங்கம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கவில்லை.

நாளை தேர்தல்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தனர். மேலும் மூத்த தலைவர்கள் 23 பேர் அதிருப்தி அணியாக மாறி ஜி23 குழுவாக செயல்பட்டனர். ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் கூட காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என அவர்கள் கூறி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தான் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கார்கே VS சசிதரூர்
இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. சோனியா காந்தியின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுத்ததோடு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான ரேஸில் இருந்த பின்வாங்கினார். இதையடுத்து சோனியா காந்தி ஆதரவுடன் மாநிலங்களவை எம்பியான மல்லிகார்ஜூன கார்கே களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவர்கள் 2 பேரும் இந்தியா முழுவதும் சென்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடம் ஆதரவு கோரியுள்ளனர்.

டெல்லி செல்ல மறுத்த ராகுல்
இந்நிலையில் தான் நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் ராகுல் காந்தி டெல்லி செல்ல மறுத்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறும் நிலையில் தான் அவர் டெல்லி செல்ல மறுத்துள்ளார். மாறாக அவர் நாளை கர்நாடகாவிலேயே ஓட்டளிக்க உள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை சென்று வரும் ராகுல் காந்தி நாளை அங்கு அமைக்கப்பட்டுள்ள பூத்தில் ஓட்டளிக்க உள்ளார். இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறுதி செய்த ஜெய்ராம் ரமேஷ்
இதனை காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நாளை ராகுல் காந்தி எங்கு வாக்களிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதில் யூகங்கள் எதுவும் வேண்டாம். ராகுல் காந்தி பல்லாரி மாவட்டம் சங்கனக்கல்லுவில் உள்ள பாரத் ஜோடோ யாத்திரை முகாமில் வாக்களிக்க உள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளான 40 பேர் ஓட்டளிக்க உள்ளனர்'' என்றார்.

யாரெல்லாம் ஓட்டளிக்கலாம்?
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிடும் நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள், மாநில முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாக்களித்து புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நாளைய தேர்தலுக்காக வாக்கு சீட்டுகள் உரிய பாதுகாப்புடன் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் வரும் 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications