”இந்தியா” கூட்டணி ஆட்சியில் மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேஷன், பெண்களுக்கு ரூ.8,500..ராகுல் வாக்குறுதி
டெல்லி: "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக ரேஷனில் வழங்குவோம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இந்தியா கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும்; இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் என்னவெல்லாம் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என பட்டியலிட்டு வருகிறார் ராகுல் காந்தி. சமூக வலைதளங்களிலும் இதனை பகிர்ந்து வருகிறார் ராகுல் காந்தி.

இது தொடர்பாக ராகுல் காந்தி தெரிவிக்கையில், உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் ஒரு வாக்கு நாடு முழுவதும் நடக்கும் பயங்கரமான பாகுபாடு மற்றும் அநீதியை ஒழிக்கும். 30 லட்சம் அரசுப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தொடங்க வைக்கும்.
உங்கள் ஒரு வாக்கு ஜூலை 1 முதல் ரூ 8,500/மாதம் ஏழைப் பெண்களின் கணக்குகளுக்கு உடனடியாக மாற்ற உதவும். உங்கள் ஒரு வாக்கு இளைஞர்களுக்கு அவர்களின் முதல் வேலையான ரூ. 1 லட்சம்/ஆண்டுக்கு வழங்கும்.
உங்கள் ஒரு வாக்கு உரிமைகளை வழங்கும். உங்களது ஒரு வாக்கு அரசியலமைப்பை பாதுகாக்கும். உங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாக்கும். ஜனநாயகத்தைக் காப்பாற்றும். உங்கள் ஒரு வாக்கு தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள், பங்கேற்பு மற்றும் இடஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கும்.
உங்கள் ஒரு வாக்கு பழங்குடியினரின் நீர், காடு மற்றும் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும். இந்தியாவுக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையு ம், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும் என தெரிவித்திருந்தார்.
தற்போது புதிய வாக்குறுதிகளையும் ராகுல் காந்தி வழங்கி இருக்கிறார். இது குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது: நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்காக காங்கிரஸ் மற்றொரு பெரிய முடிவை எடுத்துள்ளது. எங்கள் அரசாங்கம் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அல்ல, 10 கிலோ ரேஷன் இலவசமாக தரும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மூலம் உணவு உரிமைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியிருந்தோம். இதன் அடுத்த கட்டமாக 10 கிலோ தானியம் வழங்கப்படும்.
10 கிலோ ரேஷன் மற்றும் மாதம் 8500 ரூபாய், கல்வி மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு தொகை ஆகியவற்றால் லட்ச்கணக்கான கணக்கான குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.
நரேந்திர மோடி 20-25 கோடீஸ்வரர்களை உருவாக்கி 'அதானி' அரசை நடத்தினார், கோடிக்கணக்கான லட்சபதிகளை உருவாக்கி 'இந்தியர்களின்' அரசை நாங்கள் நடத்துவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications