கொரோனா- டெல்லி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பத்திரிக்கையாளர் தற்கொலையில் சர்ச்சை
டெல்லி: கொரோனா தொற்றால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து பத்திரிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
டெல்லியில் வசித்து வந்த தருண் சிசோடியா (வயது 37) இந்தி நாளிதழ் ஒன்றின் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என புகார் தெரிவித்திருந்தார் தருண் சிசோடியா. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் அவர் புகார் செய்திருந்தார்.
இதனால் தருண் சிசோடியா தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்பின்னர் தருண் சிசோடியாவிடம் இருந்து செல்போனை மருத்துவமனை நிர்வாகம் பறித்துக் கொண்டு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தது.
இதனிடையே மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து குதித்து தருண் சிசோடியா தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. ஆனால் தாம் இணைந்திருந்த வாட்ஸ் அப் குரூப்களில், தான் படுகொலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என தருண் சிசோடியா பதிவு செய்திருக்கிறார்.
தற்போது தருண் சிசோடியாவின் சர்ச்சை மரணம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 48 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications