இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,152 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,152 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இந்திய நிலவரம் குறித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 35,365 ஆகும். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,152
கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 9065 பேர். மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக 459 பேர் மரணமடைந்துள்ளனர். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10498.
இதனையடுத்து குஜராத்தில் 214 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். இம்மாநிலத்தில் மொத்தம் 4395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
டெல்லியில் 3515; மத்திய பிரதேசத்தில் 2660; ராஜஸ்தானில் 2584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் 27 பேர் பலியான நிலையில் 2323 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.