24 மணி நேரத்தில் 89237 பேருக்கு கொரோனா.. சீனாவின் 10 மாத கேஸ்களை ஒரே நாளில் எடுத்த இந்தியா.. ஷாக்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89,237 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஒரே நாளில் அதிக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. எந்த நாட்டிலும் ஒரே நாளில் 89 ஆயிரம் கேஸ்கள் இதுவரை பதிவானது இல்லை. இந்தியாவில் தற்போது தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது.
கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் கொரோனா கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. புதிய கேஸ்களில் எண்ணிக்கையில் இந்தியாதான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

என்ன வேகம்
சீனாவில் மொத்தமாக 10 மாதங்களில் பதிவான கேஸ்களின் எண்ணிக்கை 85,112. சீனாவில் 10 மாதங்களில் பதிவான கேஸ்களை விட ஒரே நாளில் இந்தியாவில் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதாவது சீனாவில் கொரோனா ஏற்பட தொடங்கி இப்போது வரை பதிவான கேஸ்களை விட அதிக கேஸ்கள் இந்தியாவில் ஒரே நாளில் பதிவாகி உள்ளது.

நிலைமை மோசம்
இந்தியாவில் தற்போது 4,109,476 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 70,673 கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 3,177,667 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,038 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கொரோனா கேஸ்களாக 861,136 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

10 நாட்கள்
கடந்த 25ம் தேதி இந்தியாவில் 3231754 கொரோனா கேஸ்கள் மட்டுமே இருந்தது. தற்போது 10 நாட்களில் 8 லட்சம் கேஸ்கள் வந்துள்ளது. அதேபோல் 12 நாட்களில் இந்தியாவில் 1 மில்லியன் கேஸ்கள் வந்துள்ளது. உலகிலேயே குறைவான நாட்களில் (12 நாட்கள்) 1 மில்லியன் கேஸ்கள் வந்த ஒரே நாடு இந்தியாதான். அமெரிக்காவில் கூட அதிகபட்சமாக ஒரே நாளில் 60000+ கேஸ்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடிக்கும்
கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையில் இந்தியா தற்போது இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் இதே வேகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தால் விரைவில் இந்தியா அமெரிக்காவை முந்தி முதல் இடம் பிடித்துவிடும். 6,410,295 பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை விட 24 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்த இடம்
அமெரிக்காவில் சராசரியாக தினமும் 21000+ கேஸ்கள் மட்டுமே வருகிறது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பிரேசிலில் 4,093,586 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 1,020,310 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications