Omicron Corona: டெஸ்டிங்கை அதிகப்படுத்துங்க.. கவனமாக இருங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும், வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகம் முழுக்க ஓமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிரிட்டன், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்ட்வானா, இஸ்ரேல், தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக உலகம் முழுக்க தற்போது 110 ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கேஸ்களும், 1200க்கும் அதிகமான ஓமிக்ரான் சந்தேக கேஸ்களும் கண்டறியப்பட்டுள்ளன.

ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் கொரோனா பரவலை முன்னிட்டு இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் புதிய விமான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க வேண்டும்.

கட்டுப்பாடு
தீவிர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை உடனே அதிகரிக்க வேண்டும். ஓமிக்ரான் கொரோனா பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிர சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். உடனடியாக கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

கண்காணிப்பு
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஓமிக்ரான் கொரோனா பரவிய நாடுகளில் இருந்து இதற்கு முன்பே இந்தியா வந்தவர்களையும் சோதிக்க. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை சோதிப்பதற்கான protocalஐ கடுமையாக பின்பற்ற வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா சோதனைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

கவனமாக செயல்பட வேண்டும்
குறைவான சோதனைகள் பரவலை அதிகப்படுத்தும். மீண்டும் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். திடீரென கேஸ்கள் அதிகரிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். ஏற்கனவே கண்டறியப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளையும், புதிய ஹாட்ஸ்பாட் பகுதிகளையும் முறையாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
Recommended Video

சோதனைகள்
கொரோனா பாசிடிவ் டெஸ்ட் சதவிகிதம் 5க்கும் கீழ் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்; மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். யாருக்கும் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட கூடாது. மக்களிடம் வதந்திகள் பரவும் போது மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும், என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications