குடலிலும் ஏற்படும் ரத்தக்கட்டு.. அழுகும் திசு.. கொரோனா நோயாளிகள் கவனம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட சிலருக்கு தற்போது குடல் மற்றும் ஜீரண உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளிலும் ரத்த கட்டு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக திசு அழுகும் குறைபாடு ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு 2019ல் எப்போது பரவ தொடங்கியதோ அப்போதே அதோடு பல கிளை நோய்களும்,பாதிப்புகளும் பரவ ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக இந்த கொரோனா பரவல் காரணமாக தொடக்கத்தில் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, பாலியல் நாட்டமின்மை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட்டது.
ஆனால் புதிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தோன்ற தோன்ற புது விதமான நோய்களும், கிளை பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கொரோனா
சமயங்களில் கொரோனா பரவலால் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா ஏற்படுதல், அதீத ஸ்டிராய்டு பயன்பாடு போன்ற விஷயங்களும் பிளாக் பங்கஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மஞ்சள், பச்சை, கருப்பு என்று மூன்று வண்ணங்களில் பூஞ்சை நோய்கள் ஏற்கனவே பரவி வருகிறது. இது போக பல வித ரத்த கட்டு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

நரம்புகள்
முக்கியமாக கை, கால்கள், இதயத்திற்கு செல்லும் நரம்புகளில் ரத்த கட்டு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது கூடுதலாக குடல் மற்றும் ஜீரண உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளிலும் ரத்த கட்டு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடல் மற்றும் ஜீரண உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளில் ரத்த கட்டு ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் பலர் மருத்துவமனையில் சேர தொடங்கி உள்ளனர்.
Recommended Video

மும்பை
மும்பையில் 10-12 பேர் கடுமையான வயிற்று வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு 16-30% கொரோனா நோயாளிகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. சிறுகுடலில் ஏற்படும் ரத்த கட்டு காரணமாக Acute mesenteric ischemia (AMI) எனப்படும் பாதிப்பும் ஏற்படுகிறது.

பாதிப்பு
இது குடலில் ஏற்படும் பாதிப்பு ஆகும். சிறுகுடலில் ரத்த கட்டு ஏற்பட்டு, அது கவனிக்கப்படாமல் போனால் AMI ஏற்படலாம். இது வயிற்றுப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் கடினமான வயிற்று வலியை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ரத்த கட்டை கவனிக்காமல் போனால் அது உடல் திசுக்கள் அழுகும் நிலையை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

திசு
gangrene எனப்படும் திசு அழுகும் பிரச்சனை இதனால் ஏற்படும். வயிற்றில் இருக்கும் உறுப்புகள் இதனால் அழுகிப்போக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது உயிருக்கே கூட ஆபத்தாகும் என்றும் கூறுகிறார்கள். கொரோனா தொடர்பாக பல கிளை நோய்கள் பாதிப்புகள் ஏற்படுவதால் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை ஐசிஎம்ஆர் அதிகரித்துள்ளது. அதோடு இது தொடர்பாக தனிப்பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் அரசுக்கு உதவலாம் என்றும் ஐசிஎம்ஆர் அழைப்பு விடுத்துள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications