இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக www.covid19india.org புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இதன்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,080 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 645 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
மேலும் மொத்தம் 3,975 பேர் குணமடைந்துள்ளதாகவும் covid19india.org தெரிவித்துள்ளது. மாநிலங்களில் மகாராஷ்டிராவில் மிக அதிக அளவாக இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி
இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5218 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 251 ஆகவும் உள்ளது. டெல்லியில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அங்கு மொத்தம் 2156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் உக்கிரம்
குஜராத்தில் இன்று ஒரே நாளில் 239 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; இதனால் பாதித்தோர் எண்ணிக்கை 2178 ஆகவும் உயர்ந்துள்ளது. குஜராத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ எட்டுகிறது. குஜராத்தில் 139 பேர் குணமடைந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டி காட்டுகின்றன.

ம.பி. தமிழகம்
80 பேரை பலி கொண்ட மத்திய பிரதேசத்தில் 1552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1596 ஆக உள்ளது. ராஜஸ்தானில் மேலும் 83 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1659 ஆகி உள்ளது.

கேரளாவில் மேலும் 19 பேர்
உத்தரப்பிரதேசத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கேரளாவில் இன்று 19 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 426 ஆனது. கர்நாடகாவில் மொத்தம் 418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தெலுங்கானாவில் 928 பேரும் ஆந்திராவில் 757 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications