டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- INDIA COVID-19 TRACKER

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை 450 ஐ நெருங்குவதாக INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 420 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகப் புள்ளி விவரம். இந்தியாவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- INDIA COVID-19 TRACKER இன் புள்ளி விவரங்கள் சற்று மாறுபட்டவையாக உள்ளன.

Coronavirus death toll reaches to 450 : INDIA COVID-19 TRACKER

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,430 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3, 202 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 1,640; தமிழகத்தில் 1,267; ராஜஸ்தானில் 1,131 மத்திய பிரதேசத்தில் 1,164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது. மொத்தம் 194 பேர் இங்கு மரணமடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் கொரோனா பயங்கர தாக்குதல்- ஒரே நாளில் 728 பேருக்கு பாதிப்பு சிங்கப்பூரில் கொரோனா பயங்கர தாக்குதல்- ஒரே நாளில் 728 பேருக்கு பாதிப்பு

இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் 55 பேரும் குஜராத்தில் 36 பேரும் தமிழகத்தில் 15 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 14 பேரும் உ.பி.யில் 13 பேரும் கொரோனா தொற்று நோயால் மாண்டு போயுள்ளனர்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 448 என்கிறது INDIA COVID-19 TRACKER .

கொரோனா

English summary
According to the INDIA COVID-19 TRACKER, the death toll due to the coronavirus reaches to 450 in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X