இந்தியாவில் கொரோனா... 24 மணி நேரத்தில் 60000 பதிவு... உயிரிழப்பு 933!!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 60000த்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 933 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 42,578 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6,19,088 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,88,61த்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 13,78,105 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருபவர்களின் சதவீதம் 67.62% ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50,000த்தையும் கடந்து சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 933 உயிரிழந்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,578 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 2,33,87,171 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,98,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகளவில் பதிவாகி வருகிறது. மகாராஷ்டிராவில் 4,90,262 பேரும், தமிழ்நாட்டில் 2,79,144 பேரும், ஆந்திரப்பிரதேசத்தில் 2,06,000 பேரும், கர்நாடகாவில் 1,58,254 பேரும், டெல்லியில் 1,42,723 பேரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மீண்டும் வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications