நாடு முழுக்க களைகட்டிய ஒற்றுமை தீபம்.. தமிழக முதல்வர், துணை முதல்வர் விளக்கேற்றினர்
இன்று நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி: இன்று நாடு முழுக்க அனைத்து விளக்குகளையும் அணைத்து தீபம் ஏற்ற, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இதையேற்று இன்று இரவு 9 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாடு முழுக்க பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு முழுக்க மொத்தம் 3671 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 485 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார். அதில் கொரோனா என்னும் இருளுக்கு எதிராக நாம் ஒன்றாக இணைந்து செய்லபட போகிறோம். நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தும் வகையில் கொரோனாவுக்கு எதிராக இன்று இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும்.

இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, வெறும் செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை ஏற்று நாடு முழுக்க மக்கள் விளக்கு ஏற்றினர். மெழுகுவர்த்திகளையும் ஏற்றினர்.

இரவு 9 மணிக்கு மின் விளக்கை அணைத்து, பிறகு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றினர். இதன்பிறகு மக்கள் பட்டாசு வெடித்தனர். இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை தீபம் ஏற்றப்பட்டது. தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மக்கள் தீபம் ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரும் தங்கள் வீடுகளில் ஒளியேற்றினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரும் தங்கள் வீடுகளில் ஒளியேற்றினர். நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications