லாக்டவுனால் இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 29.32 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
லாக்டவுனால் இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 29.32 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
டெல்லி: லாக்டவுனால் இந்தியாவில் மட்டும் விமான போக்குவரத்துத் துறையில் 29.32 லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு- International Air Transport Association (IATA) எச்சரித்துள்ளது.
Recommended Video
கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் 40 நாள் லாக்டவுன் தற்போது 5 வாரம். இந்த லாக்டவுன் காலம் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையை முடக்கி வைத்துள்ளது.

இந்த லாக்டவுன் விளைவுகள் என்பது 40 நாட்களுடன் முடிவடையப் போவதில்லை என்பது இப்போதே புரிந்துவிட்டது. ஒவ்வொரு துறையும் ஆட்குறைப்பு, ஊதிய குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனடிப்படையில் இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறையில் 29.32 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளது என்று சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11,221 மில்லியன் டாலர் குறைவாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
லாக்டவுனுக்கு பிந்தைய காலத்திலும் பயணிகளிடையே விமானப் போக்குவரத்தின் தேவை என்பது 47 சதவீதம் சரிவை எதிர்கொள்ளுமாம். இந்தியா மட்டுமல்ல இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து என பல நாடுகளும் இந்த பேராபத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய துணைத் தலைவர் கன்ராட் கிளிபோர்டு வலியுறுத்தியிருக்கிறார்.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications