இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரிப்பு- மகாராஷ்டிராவில் அதிகம் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus positive cases rises to 151 in India

மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கேரளாவில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 16 பேரும் கர்நாடகாவில் 11 பேரும் கொரோனா தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லியில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

Coronavirus positive cases rises to 151 in India

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7426 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+