மோசமாகும் நிலைமை.. இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மகாராஷ்டிராவில் மட்டும் 1 லட்சம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 305613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கொரோனா பரவி வருகிறது. தொடக்க காலத்தில் இந்தியாவில் மிகவும் மெதுவாக கொரோனா பரவி வந்தது. ஆனால் தற்போது அதே கொரோனா பரவல் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவில் நான்கு முறை கொரோனா பாதிப்பு காரணமாக முழு லாக்டவுன் போடப்பட்டது. ஐந்தாவது முறை கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் லாக்டவுன் போடப்பட்டது. ஆனாலும் கூட தொடர்ந்து இந்தியாவில் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.
நாடு முழுக்க வேகமாக அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை.. மறைத்த நம்பர்களும் வெளியே வருகிறது
இந்தியா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 305613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 146726 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மொத்தம் 150161 மொத்தம் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் குணமாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா காரணமாக 8711 பலியாகி உள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் மோசமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 101141 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 51346 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள்.
தமிழகம் நிலை
தமிழகத்தில் மொத்தம் 40698 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமா 367 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 18284 ஆக்டிவ் கொரோனா நோயாளிகள் உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.
டெல்லி நிலைமை
டெல்லியில் கொரோனா காரணமாக 34687 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 20871 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். அங்கு 1085 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் மொத்தம் 22562 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 5645 ஆக்டிவ் நோயாளிகள் குஜராத்தில் உள்ளனர். அங்கு மொத்தம் 1416 கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர் .