கொரோனா: 24 மணிநேரத்தில் 35 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 308 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா. இம்மாநிலத்தில் 1985 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகாராஷ்டிராவில் 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 1075 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ராஜஸ்தானில் 804, மத்திய பிரதேசத்தில் 564, தெலுங்கானாவில் 504, உ.பி.யில் 483, கேரளாவில் 376 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 36 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 25 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். இங்கு மொத்தம் 516 பேருக்கு கொரோனா உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 1154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆந்திராவில் 427 பேரும் ஜம்மு காஷ்மீரில் 245 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில் 232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
INDIA COVID-19 TRACKER
மேலும் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 331 என்றும் 9,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தமிழகத்தில் 1043 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் மொத்தம் 1,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதனையே INDIA COVID-19 TRACKER புள்ளி விவரமும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications