கணவரின் வருமானத்தை முடக்கிவிட்டு.. ஜீவனாம்சம் கேட்ட மனைவி! நீதிபதி கொடுத்த நச் தீர்ப்பு
டெல்லி: திருமணம் என்பது இரண்டு மனங்கள் இணைவதுதான். ஆனால், வரதட்சணை என்கிற பெயரில் நடக்கும் கொடுமைகள் இந்த உறவை லாப-நஷ்ட பிசினஸாக மாற்றிவிட்டன. இப்படி இருக்கையில், திருமண முறிவு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும், இந்த முறிவை காரணம் காட்டி பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு டார்ச்சர் செய்வதாகவும் ஆண்கள் புலம்புகின்றனர். இப்படியான வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு கவனம் பெற்றிருக்கிறது.
வேத் பிரகாஷ் சிங் என்பவர் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு வினிதா என்பவருடன் திருமணம் நடந்திருந்தது. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், வழக்கமாக வரும் பொருளாதார பிரச்சனைகள் இவரது குடும்பத்திலும் சூறாவளியை கிளப்ப.. 2019ல் நிலைமை தலைக்கீழாய் மாறியது.

குடும்ப சண்டையில், வினிதாவின் தந்தையும், சகோதரரும் சேர்ந்து பிரகாஷை போட்டு அடி வெளுத்து இருக்கின்றனர். இந்த தாக்குதலின்போது பிரகாஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில்.. அவருடைய முதுகு தண்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரால் சுயமாக எழுந்து நடமாட கூட முடியவில்லை. அவரது வேலையும் போய்விட்டது. இந்த சூழலிலும், மனைவி வினிதா தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கணவர் வருமானம் ஈட்ட முடியாமல் போனதற்கு காரணம் மனவைியின் குடும்பத்தினர் நடத்திய தாக்குதல்தான். ஒருவரை செயல்படாமல் ஆக்கிவிட்டு.. அவரிடமே பணம் கேட்பது என்பது அர்த்தமற்றது. கணவரின் வருமான ஆதாரத்தையும், சொத்துக்களையும் ஏற்கெனவே குடும்பத்தினர் முடக்கி வைத்திருக்கின்றனர். மட்டுமல்லாது வினிதா நன்கு படித்தவர். சுயமாக வருமானம் ஈட்டக்கூடியவர்.
எனவே கணவரிடமிருந்து ஜீவனாசம் பெற்றுத்தவரை உத்தரவிட முடியாது. அவரை எங்களால் கட்டாயப்படுத்த முடியாது. பல வழக்குகளில். கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் எப்படியாவது சம்பாதித்து மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், இந்த வழக்கில்.. கணவரின் வருமானம் இழப்புக்கு காரணமே மனைவிதான். எனவே ஜீவனாம்சம் கொடுக்க கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications