Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதெல்லாம் நீதித்துறை வேலை இல்ல.. அனைத்திலும் தலையிட்டால் அரசு எதற்கு? மத்திய சட்ட அமைச்சர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லாவற்றிலும் நீதித்துறையே தலையிட்டால் அரசாங்கம் எதற்கு உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

தனியார் ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடே நடத்திய கான்கிளேவ் நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், துறை சார் வல்லுநர்கள் கலந்துகொண்டு பேசுவது வழக்கம்.

அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.

நீதிமன்றத்தின் வேலை இல்லை

நீதிமன்றத்தின் வேலை இல்லை

அப்போது பேசிய அவர், "கொரோனா காலக்கட்டத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கொரோனா தொடர்பான முடிவுகளை எடுக்க தனி குழுவை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. உடனே நாங்கள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் இது நீதிமன்றத்தில் வேலை இல்லை என்று சொல்ல சொன்னோம்.

அரசின் வேலை

அரசின் வேலை

எங்கள் வேலையை உச்சநீதிமன்றம் செய்யக்கூடாது என்று கூறினோம். இதுபோன்ற சவால்களை சமாளிக்கும் இடத்தில்தான் அரசாங்கம் உள்ளது. நான் எங்காவது நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிட்டு உள்ளேனா? இல்லை. நீதித்துறையை வலுவான அமைப்பாக உருவாக்கவே நான் அறிவுறுத்தி வருகிறேன்.

அரசாங்கம் எதற்கு?

அரசாங்கம் எதற்கு?

நீதிபதிகள் அவர்கள் எதிர்பார்க்கும் பணியை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஒருவேளை நீதித்துறையே எங்கு சாலை அமைக்க வேண்டும்? என்பன போன்ற முடிவுகளை எடுத்தால் அரசாங்கம் எதற்கு? சுயநலனுக்காக பொதுநல வழக்குகள் தொடுக்கும்போது அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வழக்குகள்

வழக்குகள்

எல்லா விசயமும் ஏன் நீதிமன்றத்துக்கு செல்கிறது என்பதே எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு ஜாமீன் மனுவும் உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம் ஏன் ஜாமீன் மனுவை விசாரிக்கிறது கீழமை நீதிமன்றங்களே இதுபோன்ற மனுக்களை விசாரிக்க வேண்டும்.

ஜாமீன்

ஜாமீன்

உயர்நீதிமன்றங்களும் குறைந்த அளவிலான ஜாமீன் மனுக்களையே விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை மறந்துவிடுங்கள். மரண தண்டனை அல்லது அதற்கு தொடர்புடைய வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகள் உச்சநீதிமன்ற விசாரணைக்கு தகுதியற்றவை." என்று தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+