இந்தியாவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா 3.15 லட்சம் பேர் பாதிப்பு - ஒரே நாளில் 2102 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,15,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒரு நாள் பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,15,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,59,24,806 பேராக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2102 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக மக்களை கொரோனா வைரஸ் தன் பிடியில் வைத்துள்ளது. 14.75 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அலை அலையாக வீசத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, டெல்லியில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

3,15,802 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 3,15,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,59,24,806 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1,34,49,406 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு 22,90,728 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 2102 பேர் பலி
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 2,102 பேர் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,672 பேராக அதிகரித்துள்ளது.

டாப் 10 மாநிலங்கள்
நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினசரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைவதால் சுடுகாடுகளில் புதைக்கவும், தகனம் செய்யவும் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

53 பேர் பலி
தமிழகத்தில் நேற்று மேலும் 11,681பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,25,059 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 7,071 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,27,440 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது.

கடைசி ஆயுதம் முழு முடக்கம்
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது மக்கள் கைகளில்தான் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 13 கோடி தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளன. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கத்தை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தினசரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் கடந்த ஆண்டைப்போல மீண்டும் முழு முடக்கம் அமலாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications