லாக்டவுன் காலத்தில் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊர் திரும்பினர்- மத்திய அமைச்சர்
லாக்டவுன் காலத்தில் நடந்து சென்றவர்கள் உட்பட 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் சுமார் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அளித்துள்ள தரவுகளின்படி, லாக்டவுன் காலத்தில் நடந்து சென்றவர்கள் உட்பட 1.06 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.

தற்காலிகமாக கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மார்ச்-ஜூன் மாதங்களில் 29,415 உயிரிழப்புகளுடன் 81,385 விபத்துக்கள் சாலைகளில் நிகழ்ந்துள்ளதாகவும் வி.கே சிங் லோக்சபாவில் தெரிவித்தார்.
லாக்டவுன் காலத்தில் சாலை விபத்துக்களில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக அமைச்சகம் தனித்தனி தரவுகளை பராமரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
சொந்த மாநிலங்களுக்கு திரும்பி குடியேறிய தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, நீர், சுகாதார வசதிகள் மற்றும் முறையான ஆலோசனைகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்துறை அமைச்சகம் மாநில / யூனியன் பிரதேசங்களுக்கு வழக்கமான ஆலோசனைகளை அளித்துள்ளது.

"நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடையாக நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், அடிப்படை மருந்துகள் மற்றும் மிதியடிகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்த அமைச்சகம் உதவியது," என்று அவர் கூறினார்.
உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் போக்குவரத்து வசதி செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் வி.கே சிங். சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் மூலமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications