கோவிஷீல்டு 2 டோஸ் கால இடைவெளி.. மீண்டும் மாற்றியமைக்க திட்டமிடும் மத்திய அரசு.. இது தான் காரணமாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாடு குறைந்துள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிஷீல்டு டோஸ் டோஸ் இடைவெளியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. இடையில் கொரோனா 2ஆம் அலை உச்சம் பெற்ற சமயத்தில் கடுமையான வேக்சின் பற்றாக்குறை நிலவியது.

இதனால் வெளிநாடுகளுக்கு வேக்சின் ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டது. மேலும், கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியும் நீட்டிக்கப்பட்டது.

கோவிஷீல்டு டோஸ் இடைவெளி

கோவிஷீல்டு டோஸ் இடைவெளி

முதலில் 4 முதல் 6 வாரங்களாக இருந்த கோவிஷீல்டு வேக்சின் கால இடைவெளி பின்னர் 8 முதல் 12 வாரங்களாகவும், அதன் பிறகு 12 முதல் 16 வாரங்களாகவும் நீட்டிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. வேக்சின் பற்றாக்குறையை மறைக்கவே டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும் டோஸ்கள் கால இடைவெளியை அதிகரிப்பதால் வேக்சின் பலனும்கூட குறைய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.

மத்திய அரசு

மத்திய அரசு

ஆனால், அதிக கால இடைவெளியில் வேக்சின் அளிப்பதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிப்பதாக வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்தது. இந்தச் சூழலில் வேக்சின் பற்றாக்குறை இப்போது குறைந்துள்ள நிலையில், 45 வயதைக் கடந்தவர்களுக்கான வேக்சின் கால இடைவெளியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil
    மீண்டும் மாற்றம்

    மீண்டும் மாற்றம்

    இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் என் கே அரோரா கூறுகையில், "தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பல்வேறு தரவுகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். இதன் மூலம் அறிவியல்பூர்வமாக கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் கோவிஷீல்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை, குறிப்பாக 45 வயதைக் கடந்தவர்களுக்குக் குறைப்பது குறித்து வரும் காலங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    கோவிஷீல்டு

    கோவிஷீல்டு

    கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகள் தான் அதிகபட்சமாகப் பயன்படுத்துகின்றன. அதில் பிரிட்டன் நாட்டில் ஒரு கட்டத்தில் டோஸ் இடைவெளி 12 வாரங்கள் வரை அதிகப்படுத்தப்பட்டன. ஆனால், பின்னர் இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி குறைவாக இருப்பதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிப்பதை அந்நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து இப்போது அங்கு இரண்டு டோஸ் கால இடைவெளி அதிகபட்சமாக 8 வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+