பாகிஸ்தானை கதற கதற தோற்கடித்த "சரித்திரம்"! நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் 'வெறி' கொண்டாட்டம்!
டெல்லி: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சரித்திர வெற்றியை பெற்றது. இந்திய அணியின் இந்த அபார வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடி தீர்த்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த போட்டிகளில் ஒன்றான இந்தியா- பாகிஸ்தான் மோதியது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் கடந்த 2 நாட்களாக பரபரப்பும் பதற்றமும் கிரிக்கெட் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.

2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி, கேஎல் ராகுல், பாகிஸ்தான் பந்துவீச்சுகளை பிரித்து மேய்ந்தனர். இந்திய அண் 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களைக் குவித்து பாகிஸ்தானை மிரள வைத்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென ஓடிப் போயினர். இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில், பாகிஸ்தானை வீழ்த்தி சம்பவம் செய்துவிட்டது.

இந்திய அணியின் இந்த சரித்திர வெற்றியை, நாடு முழுவதும் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடித் தீர்த்தனர். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பிரம்மாண்ட தேசிய கொடி ஏந்தி வீதிகளில் கொண்டாடிய ரசிகர்கள்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கைகளுடன் இந்திய வெற்றியை கொண்டாடினர் ரசிகர்கள்

மேற்கு வங்கம் சிலிகுரியில் இரவிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மகிழ்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வீதிகளில் உற்சாகம் கரைபுரண்டோட வெற்றி களிப்பில் மிதந்தனர் நமது ரசிகர்கள்.
-
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications