3 மணி நேரம்தான்! டெல்லியில் இருந்தே சென்னை வங்கியில் 2 கோடி கொள்ளை..நைஜீரிய கும்பல்! எப்படி நடந்தது?
டெல்லி: சமீப காலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களிடம் தான் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படுவது அதிகரிக்கிறது என்றால் வங்கி அதிகாரிகளிடமே நைஜீரிய கும்பல் ஒன்று கைவரிசை காட்டியுள்ளது. நூதன முறையில் நடைபெற்ற இந்த சைபர் கொள்ளை சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் மண்ணடியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் சார்பில் கடந்த மாதம் சென்னை போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் வங்கியின் சர்வரை ஹேக் செய்து அதில் இருந்து 2.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விசரணை நடத்தினர்.

கீ லாக்கர் சென்ற செயலி
விசாரணையில், கூட்டுறவு வங்கியின் சர்வரை ஹேக் செய்யும் வகையில் phising மெயில் ஒன்றை அனுப்பி இந்த மோசடி நடைபெற்றது தெரியவந்தது. அதாவது, மெயிலில் வரும் லிங்கை கிளிக் செய்தவுடன் கீ லாக்கர் சென்ற செயலி பயன்படுத்துவர்களுக்கு தெரியாமலேயே கணிணியில் தானாக இன்ஸ்டால் ஆகும். இதன்படி இந்த செயலி வங்கி அதிகாரிகளுக்கு தெரியாமலேயே பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

சைபர் தாக்குதல் மூலமாக
இந்த கீ லாக்கர் ஒரு கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்யப்பட்டால் அதன் மூலம் அந்த கணிணியின் செயல்பாடு மற்றும் அதன் கீ போர்டில் என்ன டைப் செய்கிறோம் என்பதை தெரியாமல் வேறு ஒருவர் கண்காணிக்க முடியும். இதனை பயன்படுத்தி சைபர் தாக்குதல் மூலமாக இந்த நூதன கொள்ளை அரங்கேறியிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். sweet 32 attack என்று சொல்லப்படும் சைபர் தாக்குதல் மூலமாக கூட்டுறவு வங்கியின் சர்வருக்குள் நுழைந்து மொத்தமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

6 மணியில் இருந்து 9 மணிக்குள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளம் மூலம் லிங்கை அனுப்பி நவம்பர் மாதம் வரை கொள்ளையர்கள் காத்திருந்துள்ளனர். நான்கு மாதங்களாக வங்கியின் செயல்பாடுகள் டேடாக்களை கவனித்து வந்த கொள்ளையர்கள் கீ லாக்கர் செயலி மூலம் அனைத்தையும் திருடியிருக்கின்றனர். இப்படி கிடைத்த டேட்டாக்களை பயன்படுத்தி கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கூட்டுறவு வங்கி வேலை நேரத்திற்கு முன்பாக அதாவது காலை 6 மணியில் இருந்து 9 மணிக்குள் பணத்தை கொள்ளையடித்து பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

1 கோடி அபேஸ்
இதனை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக சைபர் கிரைமிற்கு புகார் அளித்து இருக்கின்றனர். இதனால், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 1.5 கோடி பணம் மீட்கபப்ட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியை நைஜீரியாவில் உள்ள வங்கிகளுக்கும் மாற்றி கிரிப்டோ கரன்சிகளாகவும் மாற்றப்பட்டு இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி 32 வங்கி கணக்குகளை உருவாக்கிய நைஜீரிய கும்பல் இந்த மோசடி திட்டத்தை அரங்கேற்றியதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.

ஏற்கனவே குஜராத்தில் கொள்ளை
இந்த நைஜீரிய கும்பல் டெல்லி உத்தம் நகரில் இருந்து செயல்பட்டதை கண்டுபிடித்த போலீசார் டெல்லி விரைந்தனர். ஏக்னே காட்வின் மற்றும் அகஸ்டின் என்ற நைஜீரிய நாட்டவர்கள் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசரணை நடத்தினர். அதில், டெல்லியில் 8 ஆயிரம் ரூபாய்க்கு வீடுகளை வாடகைக்கு எடுத்து கணிணிகளை வைத்து மோசடி செயலில் ஈடுபட்டதும் குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இந்த கும்பல் ஏற்கனவே கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
துவாரகா நீதிமன்றத்தில் இரு நைஜீரியர்களையும் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். சுற்றுலா, பட்டப் படிப்பு என பல்வேறு காரணங்களை சொல்லி இந்தியாவுக்கு வந்த இந்த நைஜீரியர்கள் சைபர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் சைபர் கும்பலின் முழு பின்னணியும் தெரிய வரும் எனத்தெரிகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications