வலுவிழக்கும் மஹா புயல்.. தீவிர புயலாக மாறும் புல்புல்.. வெளுத்து வாங்க போகும் மழை.. எங்கு தெரியுமா?
Recommended Video
டெல்லி: அரபிக் கடலில் உருவான மஹா புயல் வியாழக்கிழமை மாலை வலுவிழந்துவிடும் என்றும் புல் புல் புயலானது அதி தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் அரபிக் கடலில் கியார் புயல் உருவானது. அது ஓமன் நோக்கி நகர்ந்துவிட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் புதிய புயல் உருவானது.
அதற்கு புல் புல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை பாகிஸ்தான் வைத்துள்ளது. இந்த புயல் ஒடிஸா நோக்கி செல்லும் என கூறப்பட்டது. ஆனால் இது அங்கிருந்து விலகி வங்கதேசத்துக்கு செல்லும் என்றும் கொல்கத்தாவில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடல்
இந்த நிலையில் இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மஹா புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அது அரபிக்கடலின் மத்திய கிழக்கு பகுதி நோக்கி செல்கிறது.

அதிக மழை
அநேகமாக அடுத்த 12 மணி நேரத்தில் அந்த புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழக்கும். இது நாளை மாலை குறைந்த காற்றழுத்தமாக மாறும். இதனால் இன்று குஜராத் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை முதல் மிக அதிக மழை வரை பெய்யக் கூடும்.

வடக்கு நோக்கி நகரும்
டையு, ஜுனாகார், கிர், சோம்நாத், அம்ரேலி, பாவ்நகர், சூரத், பாரூச், ஆனந்த், போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். இதனிடையே புல் புல் புயலானது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்கிறது.

மழை பெய்யும்
இது வங்கக் கடல் பகுதி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மத்திய கிழக்கில் நிலை கொண்டிருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். இதனால் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.

வாய்ப்பு குறைவு
அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் நிகோபார் பகுதியில் லேசான முதல் குறைந்த அளவிலான மழை பெய்யும். ஒடிஸாவில் மழை பெய்யும். ஒடிஸா கடலோர பகுதியை புயல் தாக்குவதற்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications