கொரோனாவிலிருந்து மீண்டோரின் நுரையீரல் எப்படி இருக்கும்.. ஆய்வில் நல்ல தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுரையீரல்கள் தானாக சரியாகிவிடும் என அண்மையில் நடந்த ஆய்வுகள் கூறுகின்றன.

கொரோனா நோய் முக்கியமாக குறிவைப்பது நுரையீரல்களைத்தான். நோய் தொற்று வீரியம் ஆகும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

Damage lungs can repair themselves for the post Covid 19 patients

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பதால் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதம் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 82 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 6, 12, 24 வாரங்களில் நுரையீரல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் டிஸ்சார்ஜ் ஆன 6 வாரம் மற்றும் 12 வாரம் ஆன நோயாளிகளுக்கு நுரையீரலை ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது.

அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு கணிசமாக குறைந்தது தெரியவந்தது. டிஸ்சார்ஜ் ஆகி 6 வாரங்கள் ஆன நோயாளிகளில் 88 சதவீதம் பேருக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருந்தது ஸ்கேனில் தெரியவந்தது. அது போல் டிஸ்சார்ஜ் ஆகி 12 வாரங்கள் ஆன நோயாளிகளில் 56 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது.

இதற்கு அர்த்தம் என்னவெனில் கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்தாலும் டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவர்களுக்கு தானாகவே சரியாகிவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற ஒரு ஆய்வு பிரான்ஸிலும் நடத்தப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கும் நுரையீரல் மறுவாழ்வு மையத்தில் இருந்த நோயாளிகளுக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நுரையீரல் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் நோயாளிகளின் நுரையீரல் வேகமாக நல்ல நிலைக்கு வருவதும் அவர்களது தசை வலிமை கூடுவதும் நுரையீரலின் திறன் கூடுவதும் கண்கூடாக பார்க்க முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+