தீபாவளியன்று பகலிலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.. தமிழக அரசு மேல்முறையீடு!

தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்தியா முழுக்க வரும் நவம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

Deepavali Crackers Case: Tamilnadu government appeals in SC against new restrictions

இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் இதில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது பராம்பரியத்திற்கு எதிரானது என்று மனுதாக்கல் செய்துள்ளது.

காலையில் பட்டாசு வெடிப்பதுதான் தமிழக கலாச்சாரம். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் வேண்டும் என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+