சிங்கப் பெண்ணே.. தீபிகா படுகோன் மாஸ்.. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திற்கு வருகை.. மாணவர்களுடன் கைகோர்ப்பு
Recommended Video
டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே பங்கேற்றார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஹாஸ்டல் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த இடதுசாரி மாணவர்கள் மீது முகமூடி அணிந்து வந்த வன்முறை கும்பல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூறுகின்றன.
அதேநேரம் தங்கள் தரப்பு மீதும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடதுசாரி மாணவர்கள்தான் இதன் பின்னணியில் இருப்பதாகவும், ஏபிவிபி குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவர்கள் அமைப்பு சார்பில் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்றும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது.
Delhi: Deepika Padukone joins students at Jawaharlal Nehru University, during their protest against #JNUViolence. pic.twitter.com/9P6IMzs0AS
— ANI (@ANI) January 7, 2020
இந்த நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் தீபிகா படுகோனே அங்கு வருகை தந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கெடுத்தவர் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
#WATCH Delhi: Deepika Padukone joins students at Jawaharlal Nehru University, during their protest against #JNUViolence. pic.twitter.com/Ytc28MCGHT
— ANI (@ANI) January 7, 2020
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற முக்கியமான விஷயங்களில் பாலிவுட் நடிகர், நடிகைகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நம்பர் ஒன் நடிகையாக அறியப்படும் தீபிகா படுகோன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் நேரடியாக பங்கெடுத்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போராடக்கூடிய மாணவர்களுக்கு இது உற்சாகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications