டெல்லி தேர்தல்.. 62.59% வாக்குகள் பதிவு.. 24 மணி நேர தாமதத்திற்கு பின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது என்று டெல்லி தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது .70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. வரும் 11ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் நேற்று முடிந்த பின் 5 மணி வரையிலான வாக்கு பதிவு 61.54% என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மொத்தமாக எவ்வளவு வாக்கு பதவி செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. நேற்று இரவு வரை தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. பொதுவாக தேர்தல் முடிந்து 3 மணி நேரங்களில் முழு வாக்கு பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும்.
ஆனால் டெல்லி தேர்தல் வாக்குபதிவு சதவிகிதம் குறித்து அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். எனக்கு இது பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியினர் பலர், பத்திரிகையாளர்கள் பலரும் இந்த கேள்வியை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த டெல்லி தேர்தல் ஆணையர் ரன்பீர் சிங், வாக்குப்பதிவு குறித்து விளக்கம் அளித்தார்.
அதில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. நாடாளுமன்ற தேர்தலைவிட 2% வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளது. 2015 சட்டமன்ற தேர்தலில் 67.47% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக பல்லிமரன் தொகுதியில் 71.6% வாக்குகள் பதிவானது. குறைவாக டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் 45.4% வாக்குகள் பதிவானது.
வாக்கு சதவிகிதத்தை தாமதமாக அறிவிக்க தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. கணக்கு எடுக்கும் பணி காரணமாகவும், சரிபார்ப்பு பணி காரணமாகவும் இதில் தாமதம் ஏற்பட்டது. துல்லியமான சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் என்று நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications