ஹாஸ்பிட்டல் போய்.. சுடுகாட்டில் காத்திருந்தது போய்.. எரியூட்ட விறகுகளுக்காக காத்திருக்கும் சடலங்கள்
டெல்லி: டெல்லியில் உள்ள சுடுகாடுகளில் கொரோனா வைரஸால் பலியாகும் நபர்களை எரியூட்ட கட்டைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 300 பேர் வரை இறக்கிறார்கள். டெல்லியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை 350 பேர் கொரோனாவால் பலியாகினர்.
இவ்வாறு இறப்போரை எரியூட்ட சுடுகாடுகளில் டோக்கன் சிஸ்டம் மூலம் சடலங்களுடன் உறவினர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரிப்பால் மருத்துவமனைகளில் மட்டுமல்லாது சுடுகாடுகளிலும் சடலங்களை எரியூட்ட மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

கூடுதல் தகனமேடைகள்
இதனால் கூடுதலாக தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் உள்ள சாராய் காலே கான் எனும் இடுகாட்டில் ஏராளமான சடலங்களை எரியூட்டப்படுகின்றன. மேலும் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் புதிய தகனமேடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

சிறிய அளவு
தற்போது அங்கு வாகன நிறுத்துமிடத்தில் 20 க்கும் மேற்பட்ட தகனமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட தகனமேடைகள் வேறு ஒரு இடத்தில் தயார் செய்யப்படுகிறது. இதுகுறித்து தகனமேடைகளை கட்டும் ஒப்பந்ததாரர் கூறுகையில் புதிதாக அமைக்கும் தகனமேடைகள் தினந்தோறும் கொண்டு வரும் சடலங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் சிறிது அளவுதான் உள்ளது என்றார்.

சடலங்கள்
70 தகனமேடைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. எனினும் எரியூட்ட கட்டைகள் இல்லாத நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சுடுகாடுகளுக்கு கொண்டு வரப்படும் சடலங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

சடலங்கள் காத்திருப்பு
பாசிம் விஹாரில் உள்ள சுடுகாட்டில் அதிகப்படியான சடலங்கள் காத்திருப்பதால் கடந்த 24 மணி நேரத்தில் 50 கூடுதல் தகனமேடைகள் கட்டப்பட்டுள்ளன. மேற்கொண்டு கட்டுவதற்கு இடம் போதவில்லை. அது போல் நிகாம் போத் காட்டில் முன்பெல்லாம் 20 சடலங்கள்தான் எரியூட்டப்படும். ஆனால் தற்போது தினமும் 50 சடலங்கள் வருகின்றன.
|
தீர்ந்து போன கட்டைகள்
தகனமேடைகள் கிடைத்தும் கட்டைகள் இல்லாததால் உறவினர்கள் சுடுகாட்டில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான கட்டைகளை இருப்பு வைத்திருந்த நிலையில் இவை அனைத்து வெறும் 10 நாட்களிலேயே தீர்ந்து விட்டன. தற்போது கட்டைகளுக்காக காத்திருக்கிறோம் என்றார்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications