டெல்லி எல்லைகளில் ஓராண்டு நீடித்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது! கூடாரங்கள் அகற்றம்!!
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் ஓராண்டு காலம் தொடர்ந்து நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து டெல்லி எல்லைகளில் தங்களது கூடாரங்களை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அகற்றினர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லி எல்லைகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உ.பி, ராஜஸ்தான் மாநில விவசாயிகள் இந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றனர்.
பஞ்சாப் மாநில விவசாயிகள் வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இடைவிடாமல் இப்போராட்டங்களில் பங்கேற்றனர். கடும் குளிரிலும் பனியிலும் வெயிலும் தொடர்ந்த இந்த போராட்டத்தில் இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர்.

லக்கிம்பூர் படுகொலை
இப்போராட்டங்களின் போது கடந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர்கள் பேரணி பெரும் வன்முறையில் முடிவடைந்தது. டெல்லி செங்கோட்டையில் பஞ்சாப் பிரிவினைவாதிகள் கொடி ஏற்றப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இத்தனை இன்னல்களுக்கும் இடையே விவசாயிகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது.

விவசாய சட்டங்கள் வாபஸ்
இந்நிலையில் பிரதமர் மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகவும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பின்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றபப்ட்டது. இம்மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இறங்கி வந்த மத்திய அரசு
இருந்தபோதும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாகவும் மத்திய அரசு இறங்கி வந்தது. விவசாயிகளை உள்ளடக்கிய குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இது தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அகற்றப்பட்ட கூடாரங்கள்
இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஆலோசனைகளை விவசாயிகள் நடத்தினர். இந்த நிலையில் இன்று டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றனர். முன்னதாக எல்லைகளில் அமைத்திருந்த தங்களது கூடாரங்களை அவர்கள் கலைத்தனர். அதே நேரத்தில் மத்திய அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications