Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போல.. அதான் இப்படி” - முன்னாள் சிபிஐ இயக்குனருக்கு அபராதம் விதித்த கோர்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனது ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு, டெல்லி உயர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பிரபலங்களின் போலி கணக்குகளை அடையாளம் காணும் நோக்கத்தோடு, அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கி வருகிறது ட்விட்டர்.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டிருந்த ப்ளூ டிக்கை ரத்து செய்த ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த நாகேஸ்வர ராவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

ட்விட்டர் ப்ளூடிக்

ட்விட்டர் ப்ளூடிக்

சமூக வலைதளமான ட்விட்டரில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் ட்விட்டர் பக்கத்திற்கு, அந்த நிறுவனம் ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கி உண்மையான பக்கம் எனச் சான்றளிக்கிறது. போலி ட்விட்டர் பக்கங்களை அடையாளம் காணவே இந்த ப்ளூ டிக் அங்கீகாரம் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிபிஐ முன்னாள் இயக்குநர்

சிபிஐ முன்னாள் இயக்குநர்

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ், சி.பி.ஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக இருந்தார். அவருக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால், அவருக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் அங்கீகாரத்தை ட்விட்டர் நிறுவனம் ரத்து செய்தது.

இதனையடுத்து இது குறித்து நாகேஸ்வரராவ் ட்விட்டர் நிறுவனத்திடம் முறையிட்டும் அவருக்கு மீண்டும் ப்ளூடிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் மீண்டும் ட்விட்டரில் ப்ளூடிக் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 ஐகோர்ட் உத்தரவு

ஐகோர்ட் உத்தரவு

நாகேஸ்வர ராவின் மனுவை விசாரித்த நீதிபதிகள், அவரது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி சில அறிவுறுத்தல்களை ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கினர். ஆனால், அவருக்கு இதுவரை ப்ளூ டிக் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த நாகேஸ்வரராவ் நீதிமன்றம் உத்தரவிட்டும் தனக்கு ப்ளூ டிக் வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

அபராதம்

அபராதம்

அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், நாங்கள் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதிதான் உத்தரவிட்டோம். அதற்குள் நீதிமன்றத்தை நாடுவதற்கான அவசரம் என்ன வந்தது? நாகேஸ்வரராவுக்கு நிறைய நேரம் இருக்கிறது போலும். அதனால் தான் இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அவர் எங்களிடம் இருந்து பதில் பரிசை எதிர்ப்பார்க்கிறார். நாங்கள் அவருக்குப் பரிசாக ரூ.10 ஆயிரம் அபராதமும், அவரது மனுவை தள்ளுபடியும் செய்கிறோம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், நாகேஸ்வர ராவ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+