இதோ கயிறுடன் உட்கார்ந்திருக்காரே.. யாருன்னு தெரியுதா.. இவர்தான் ஜலாத்.. பரபரக்கும் திஹார் சிறை
நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு அளிக்கப்படுகிறது
டெல்லி: இதோ கையில் கயிறுடன் உட்கார்ந்திருக்காரே யாருன்னு தெரியுதா.. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடப்போகும் ஹேங்மேன்தான் இவர்.. பெயர் ஜலாத்!!
எங்கெங்கோ முட்டி மோதி பார்த்தும் நிர்பயா குற்றவாளிகளால் எதுவுமே செய்ய முடியவில்லை.. தண்டனையை தடுத்து நிறுத்தவும், தாமதப்படுத்தவும் தங்கள் வக்கீலை வைத்து போராடி பார்த்தனர்.. எதுவும் வேலைக்காகவில்லை.
நாளை மறுநாள் 20-ம் தேதி இவர்களை தூக்கில் போட விசாரணை நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்தது. எனினும் சர்வதேச நீதிமன்றத்தை 4 பேரும் நாடியிருக்கிறார்கள்... இதனிடையே தண்டனையை நிறைவேற்றப்பட இன்னும் 2 நாள்தான் இருப்பதால், அதற்கான ஒத்திகை திகார் ஜெயிலில் நடத்தப்பட்டது..

ஹேங்மேன்
இவர்களை தூக்கில் போடும் ஹேங்மேன் பவன் ஜலாத் தூக்கிலிடும் பணிக்காக திகார் ஜெயிலுக்கு வந்திருந்தார்.. ஜலாத் மீரட்டில் வசிக்கிறார்.. இவர் ஒரு பெட்ஷீட் வியாபாரி. இவர் குடும்பத்தில் 4 தலைமுறையாகவே தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் என்ற போராட்ட வீரர்களை லாகூர் ஜெயிலில் தூக்கில் போட்டதும், இந்த பவான் ஜலாத்தின் தாத்தா தானாம்.

தூக்கு தண்டனை
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்றதும், ஜலாத்திடம் சிறை நிர்வாகம் கடந்த ஜனவரி மாதமே முறைப்படி தகவல் தெரிவித்து, சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பியிருந்ததாகவும் கூறப்பட்டது.. அப்போது ஜலாத் சொல்லும்போது, "ரொம்பவும் கீழ்த்தரமான வேலையை இந்த 4 பேரும் செய்திருக்கிறார்கள்.. மரண தண்டனையை நிறைவேற்றினால், அதன்மூலம் நிர்பயா குடும்பதினருக்கும், பொதுமக்களுக்கும் ஒரு ஆறுதலாவது கிடைக்கும்.. அதனால் இந்த பணியை நிறைவேற்ற நான் ரெடி" என்றார்.

ஒத்திகை
இப்போது தண்டனை உறுதியாகி இருப்பதால், குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான ஒத்திகை இன்று திகாரில் நடந்தது. அந்த தூக்கு கயிறு வலுவா இருக்கா? தூக்கு மேடை சரியா இருக்கா? என்பது போன்ற ரிகர்சல்கள் நடத்தப்பட்டன. அதேபோல, குற்றவாளிகளின் எடைகொண்ட 4 பொம்மைகள் மூலம் ஜலாத்தை வைத்து இந்த ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம் நாளை மறுநாள் விடிகாலை இவர்கள் 4 பேரையும் தூக்கிலிடுவது உறுதி எனச் சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சட்ட நடவடிக்கை
சிறையில் உள்ள இந்த 4 பேருக்கும் தினமும் மெடிக்கல் செக்-அப் நடந்து வருகிறது.. மற்றொரு புறம் அவர்களுக்கு மனநல ஆலோசனையும் தரப்படுகிறது.. இதெல்லாம் இருந்தாலும் தூக்கு தண்டனையை எப்படி நிறுத்தலாம், எப்படி ஒத்தி வைக்கலாம் என 4 குற்றவாளிகளின் தரப்பில் ஏகப்பட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications