திமுக எம்பி கதிர் ஆனந்த்தை உள்ளே புகுந்து மிரட்டியவர்கள் யார்.. அதிரடியை கையில் எடுத்த டெல்லி போலீஸ்
கதிர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது
புதுடெல்லி: திமுக எம்பி கதிர்ஆனந்தை மிரட்டியவர்கள் யார் என்ற விசாரணையை டெல்லி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது... 2 நாளைக்கு முன்பு லோக்சபா சபா துவங்கியபோது திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஒரு பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

அதில், ''நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் அத்துமீறி 2 பேர் உள்ளே நுழைந்து எனக்கு மிரட்டல் விடுத்தனர்... அவர்கள் யார் என்று கேட்டதற்கு, உளவுத்துறையினர் என்று என்னிடம் சொன்னார்கள்.. இன்று லோக் சபாவில் நான் கேட்க போகும் கேள்விகள் என்ன என்பதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள முயன்றனர். ஒரு எம்பிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
கதிர்ஆனந்த் இப்படி சொன்னதுமே, இவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பினர்.... காங்கிரஸ் கட்சியினரும் போலீசார் அத்துமீறி நடப்பதாக பகிரங்கமாக சொன்னார்கள்.. இதையடுத்து, புகார்களை எழுத்துப்பூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் எழுதி கொடுக்கலாம் என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, டெல்லி போலீசிலும் கதிர் ஆனந்த் புகார் தந்திருந்தார்.. இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த டெல்லி சாணக்கியாபுரி போலீசார், தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்பி சொன்னதுபோல, தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து சென்றது உண்மையான உளவுத்துறை அதிகாரிகள் தானா? அல்லது வேறு யாரேனுமா?
அவர்கள் ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்தார்கள்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... தமிழ்நாடு இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அங்குள்ள, வருகை பதிவேட்டையும் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அவர் யார்...துரைமுருகனின் மகன். அவரை யாராவது மிரட்ட முடியுமா, மிரட்டலுக்கு பயப்படுபவர்களா அவர்கள்? அவதூறு பரப்புவதற்காக குற்றம்சாட்டுவார்கள்" என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications