‛‛வானிலை மையம் மீது சந்தேகம்’’.. டெல்லியில் புது ரெக்கார்ட் படைத்த வெயிலால் மத்திய அமைச்சர் உத்தரவு
டெல்லி: டெல்லியில் வரலாறு காணாத வகையில் இன்று முதல் முதலாக 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் டெல்லியில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வாய்ப்பில்லை. டேட்டாவை சரிபார்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால் வானிலை மையம் தவறான தகவலை வெளியிட்டதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. பல இடங்களில் வெப்பஅலை வீசி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை என்பது பதிவாகி உள்ளது.

நேற்றைய தினம் வடமேற்கு டெல்லியில் அதிகபட்சமாக 49.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவானது. ஆனால் இன்றைய தினம் முதல் முறையாக இந்திய வரலாற்றில் டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விட அதிகமாக வெயில் பதிவாகி உள்ளது.
டெல்லியில் மாறிய வரலாறு.. தலைநகரில் கதறும் மக்கள்! முதல் முறையாக 52.9 டிகிரி செல்சியஸ் வெயில்! ஷாக்
அதன்படி இன்று டெல்லியின் புறநகர் பகுதியான முங்கேஷ்பூரில் மதியம் 2.30 மணியளவில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ள்ளது. இது டெல்லி வரலாற்றில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது. கடும் வெப்பஅலையுடன் முங்கேஷ்பூர் பகுதியில் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் வெப்பநிலை உயர்ந்து இருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஜுன் 1 வரை வெப்பஅலை வீசும் என்பதால் இன்னும் 3 நாட்களை எப்படி சமாளிப்பது என மக்கள் புலம்ப தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் டெல்லியில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பில்லை. மூத்த வானிலை அதிகாரிகள் வெளியிட்ட விபரத்தை சரிபார்க்க வேண்டும் என்று மத்திய புவியியல் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டெல்லியின் வெப்பநிலை 52.9 டிகிரி செல்சியஸை தொட்டிருக்க வாய்ப்பில்லை. இதனால் வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரிகள் டேட்டாவை சரிபார்க்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications