கொரோனா பாதிப்பு வேற அதிகரிக்கிறது.. டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை.. கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி: தீபாவளிக்கு முன்னதாக டெல்லியில் பட்டாசுகள் தடை செய்யப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்தார்.
டெல்லியில் நிலவும் கொரோனா வைரஸ் நிலவரத்தை தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இன்று அவர் ஆய்வு செய்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்னதாக பட்டாசுகள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்வதாக, ஏற்கனவே, ராஜஸ்தான், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்கள் அறிவித்தன. தற்போது, டெல்லி அதே வழியை கையில் எடுத்துள்ளது.

"பண்டிகை காலம் மற்றும் மாசுபாடு காரணமாக கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்துள்ளன. எனவே இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது, டெல்லியில் பட்டாசுகளை தடை செய்யவும், மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி கடந்த சில நாட்களாக கொரோனா கேஸ்களின் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக தினசரி கொரோனா நோயாளி எண்ணிக்கை 6,000 ஐ தாண்டியுள்ளது.
முன்னதாக, கெஜ்ரிவால் டெல்லி மக்களை பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும், லட்சுமி பூஜையை மெய்நிகர் வழியில் கொண்டாட தன்னுடன் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பல மாநிலங்களும் பட்டாசுக்கு தடை விதிப்பதால், சிவகாசியில் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ளோர் நிலைமை என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், கொரோனா காலத்தில் நுரையீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட கூடாது என்பதாலும், பட்டாசுக்கு தடை விதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications