ஆச்சரியம்தான்! 53 கட்சிகள், 68 கட்டங்களாக 4 மாதங்கள் நடந்த 'இந்தியா'வின் முதல் லோக்சபா தேர்தல்!
டெல்லி: சுதந்திரமடைந்த இந்தியாவின் முதலாவது லோக்சபா தேர்தல் 1951-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி வரை 4 மாதங்களாக 68 கட்டங்களாக நடைபெற்றது என்பது ஆச்சரியமான சரித்திரம்தான்.
பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அப்போது உடனே லோக்சபா தேர்தல் நடத்தப்படவில்லை. 1952-ம் ஆண்டுதான் நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது.

68 கட்டங்களாக நடந்த தேர்தல்: 1952-வது ஆண்டு லோக்சபா தேர்தல் என நம் வரலாறு பதிவு செய்திருந்தாலும் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதமே தேர்தல் தொடங்கிவிட்டது. ஆம் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி முதல் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி வரை மொத்தம் 68 கட்டங்களாக நமது நாட்டின் முதல் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் மொத்தம் 10 கோடி பேர் வாக்களித்தனர்.
401 தொகுதிகள்: நாட்டின் முதல் லோக்சபா தேர்தலின் போது மொத்தம் 401 தொகுதிகள் இருந்தன. ஆனால் 489 பேர் எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது நமது நாட்டில் அப்போது 86 தொகுதிகளில் 2 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் இரட்டை உறுப்பினர் முறை நடைமுறையில் இருந்தது.
கள நிலவரம்: 1952-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் பிரதான கட்சியாக இருந்தது. அப்போது ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. காங்கிரஸுக்கு எதிரான முதன்மை கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. 1952 தேர்தலுக்கு முன்னர் வரை ஆயுதப் போராட்டத்தை நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் முதல் லோக்சபா தேர்தலின் போது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது கம்யூனிஸ்ட் கட்சி.
அதேபோல முதுபெரும் தலைவர்கள் ஆச்சார்ய கிருபாளினி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரும் காங்கிரஸுக்கு எதிரான சிறு கட்சிகளாக தேர்தல் களத்தில் பங்கேற்றன.
ஜனசங்கம்: இன்றைய பாஜகவின் மூலவேரான ஜனசங்கத்தை சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கி 1952-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். அதேபோல அம்பேத்கரும் Scheduled Castes Federation என்ற கட்சியை தொடங்கி தேர்தலை எதிர்கொண்டார். இதுதான் இன்றைய இந்திய குடியரசு கட்சியின் தொடக்கமாகும்.
வென்ற கட்சிகளும் இடங்களும்: நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தலில் 364 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு அடுத்ததாக 37 சுயேட்சைகள் எம்பிகளாக வென்றனர். ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வென்றது. அத்தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்பது 4 இடங்களில் வென்றிருந்தது. பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கமும் 3 இடங்களைக் கைப்பற்றியது. தீவிர இந்துத்துவா பேசிய இந்து மகாசபை 4 தொகுதிகளில் வென்றது. சென்னை மாநில முஸ்லிம் லீக் என்ற கட்சி 1 இடத்தில் வென்றது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில்.. : அன்றைய சென்னை மாகாணத்தில் மொத்தம் 63 தொகுதிகள் இருந்தன. இதில் 13 தொகுதிகளில் இரட்டை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வென்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான சோசியலிஸ்ட் கட்சி 2 இடங்களில் வென்றது. சுயேட்சைகள் 15 இடங்களில் வென்று எம்பியாகினர். அன்றைய சென்னை மாகாணத்தில் கிசான் மசுதூர் பிரஜா கட்சி 6, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 இடங்களில் வென்றன. காமன்வீல் கட்சி 3 இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. முதலாவது பொதுத் தேர்தலின் போது காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காமராஜரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கல்யாணசுந்தரமும் களத்தில் நின்றனர்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications