ஆச்சரியம்தான்! 53 கட்சிகள், 68 கட்டங்களாக 4 மாதங்கள் நடந்த 'இந்தியா'வின் முதல் லோக்சபா தேர்தல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுதந்திரமடைந்த இந்தியாவின் முதலாவது லோக்சபா தேர்தல் 1951-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி வரை 4 மாதங்களாக 68 கட்டங்களாக நடைபெற்றது என்பது ஆச்சரியமான சரித்திரம்தான்.

பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. அப்போது உடனே லோக்சபா தேர்தல் நடத்தப்படவில்லை. 1952-ம் ஆண்டுதான் நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது.

Details of India s First Lok Sabha Election with 68 Phases

68 கட்டங்களாக நடந்த தேர்தல்: 1952-வது ஆண்டு லோக்சபா தேர்தல் என நம் வரலாறு பதிவு செய்திருந்தாலும் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதமே தேர்தல் தொடங்கிவிட்டது. ஆம் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி முதல் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி வரை மொத்தம் 68 கட்டங்களாக நமது நாட்டின் முதல் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் மொத்தம் 10 கோடி பேர் வாக்களித்தனர்.

401 தொகுதிகள்: நாட்டின் முதல் லோக்சபா தேர்தலின் போது மொத்தம் 401 தொகுதிகள் இருந்தன. ஆனால் 489 பேர் எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது நமது நாட்டில் அப்போது 86 தொகுதிகளில் 2 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கும் இரட்டை உறுப்பினர் முறை நடைமுறையில் இருந்தது.

கள நிலவரம்: 1952-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் பிரதான கட்சியாக இருந்தது. அப்போது ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. காங்கிரஸுக்கு எதிரான முதன்மை கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. 1952 தேர்தலுக்கு முன்னர் வரை ஆயுதப் போராட்டத்தை நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால் முதல் லோக்சபா தேர்தலின் போது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது கம்யூனிஸ்ட் கட்சி.
அதேபோல முதுபெரும் தலைவர்கள் ஆச்சார்ய கிருபாளினி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரும் காங்கிரஸுக்கு எதிரான சிறு கட்சிகளாக தேர்தல் களத்தில் பங்கேற்றன.

ஜனசங்கம்: இன்றைய பாஜகவின் மூலவேரான ஜனசங்கத்தை சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கி 1952-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். அதேபோல அம்பேத்கரும் Scheduled Castes Federation என்ற கட்சியை தொடங்கி தேர்தலை எதிர்கொண்டார். இதுதான் இன்றைய இந்திய குடியரசு கட்சியின் தொடக்கமாகும்.

வென்ற கட்சிகளும் இடங்களும்: நாட்டின் முதலாவது லோக்சபா தேர்தலில் 364 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு அடுத்ததாக 37 சுயேட்சைகள் எம்பிகளாக வென்றனர். ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வென்றது. அத்தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்பது 4 இடங்களில் வென்றிருந்தது. பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கமும் 3 இடங்களைக் கைப்பற்றியது. தீவிர இந்துத்துவா பேசிய இந்து மகாசபை 4 தொகுதிகளில் வென்றது. சென்னை மாநில முஸ்லிம் லீக் என்ற கட்சி 1 இடத்தில் வென்றது. திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில்.. : அன்றைய சென்னை மாகாணத்தில் மொத்தம் 63 தொகுதிகள் இருந்தன. இதில் 13 தொகுதிகளில் இரட்டை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வென்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான சோசியலிஸ்ட் கட்சி 2 இடங்களில் வென்றது. சுயேட்சைகள் 15 இடங்களில் வென்று எம்பியாகினர். அன்றைய சென்னை மாகாணத்தில் கிசான் மசுதூர் பிரஜா கட்சி 6, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 இடங்களில் வென்றன. காமன்வீல் கட்சி 3 இடத்தில் வெற்றி பெற்றிருந்தது. முதலாவது பொதுத் தேர்தலின் போது காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காமராஜரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கல்யாணசுந்தரமும் களத்தில் நின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+