ஏலத்தில் விடப்படும் பிரதமரின் பரிசுப் பொருட்கள்...அடடே இதுவெல்லாமா இடம் பெறுகிறது!
டெல்லி: கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டத்திற்கு உதவும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்கள் இன்று ஏலத்தில் விடப்படுகின்றன.
நாட்டின் 40 சதவிகித மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் கங்கை நதியின் தூய்மைக்காக நிதி திரட்டும் நோக்கில் பிரதமரின் பிறந்த நாளான இன்று அவரின் பரிசு பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.
கடந்த 2019-2020 ஆண்டில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்குள் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இதற்கான நிதி தேவை மேலும் அதிகரித்துள்ளது.

தூய்மை கங்கை
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவரின் பரிசு பொருட்கள் இன்று மின்னணு ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் பிரதான நதியாக உள்ள கங்கை நதியை தூய்மைப்படுத்த 'நமாமி கங்கை திட்டம்' உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் 2019-2020ல் நதியை தூய்மையாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட இதற்கான நிதி தேவை அதிகம் என்பது பணிகளை துவங்கிய பின்னர்தான் தெரியவந்துள்ளது.

ஏலம்
இதனையடுத்து இந்த திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில், பிரதமரின் பரிசு பொருட்கள் ஏலத்தில் விடப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியிருந்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "பிரதமருக்கு பரிசாக கிடைக்கப்பெற்ற விநாயகர் சிலை, அயோத்திர ராமர் சிலை, வரணாசி காசி-விஸ்வநாதர் கோயில் மாதிரிகள் ஆகியவை மின்னணு ஏலத்தில் விடப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி 'நமாமி கங்கை' திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

பரிசு பொருட்கள்
இந்த பரிசு பொருட்கள் லிஸ்ட்டில் ஏகப்பட்டவை உள்ளன. சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடி நேதாஜி சிலையை திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக இந்த சிலையின் மாதிரி கூட பரிசாக பிரதமருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற சில அற்புத பொருட்கள் ஏலத்தில் இடம்பெறுகின்றன. அதேபோல சர்வதேச அளவில் நடைபெற்ற காமன்வெல்த், பாராலிம்பிக் மற்றும் தாமஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்கள் பிரதமரை சந்தித்தபோது சில பொருட்களை வழங்கினர். இந்த பொருட்களும் ஏலத்தில் இடம் பெறுகின்றன.

நிதி தேவை
தூய்மை கங்கை திட்டம் என்பது இந்தியாவின் ஒரு கனவு திட்டம் என்று கூட சொல்லலாம். நாட்டின் 40 சதவிகித மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இந்த நதி இருக்கிறது. ஆனால் இந்த நதியின் நீர் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல என்று பல ஆய்வுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் இந்நதியை சீரமைத்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். ஆனால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. இந்த தூய்மை திட்டத்திற்கு உலக வங்கி கூட சுமார் 400 பில்லின் டாலர் உதவி செய்வதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications